பிளாஸ்டிக் தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு : பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையாக தடை விதிக்க அறிவுறுத்தல்

சென்னை : பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை : பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

மறுசுழற்சி செய்ய முடியாத ஒருமுறை பயன்பாட்டுக்கான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த ஜனவரி 1-ந்தேதி முதல் தடை விதித்து தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையின்படி, பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்யவோ, தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ கூடாது. தமிழக அரசு பிறப்பித்த இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டன. 

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்திய நாதன், பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'பிஸ்கட், சிப்ஸ் போன்ற பொருட்களை ஏற்கனவே பொதிந்து கொண்டுவரப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு அரசு விலக்களித்துள்ளது. இது சட்டவிரோதமானது. பன்னாட்டு நிறுவனங்கள், மொத்த விற்பனையாளர்களை பாதுகாக்கும் வகையில், அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு இந்த அரசாணை பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது’ என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், ‘ஆந்திரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்துள்ளது. அந்த தடை உத்தரவு பிறப்பித்த அரசாணையை அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களும் உறுதி செய்துள்ளன. தேசிய பசுமை தீர்ப்பாயம் பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்க உத்தரவிட்டுள்ளது. எனவே, எதிர்கால சந்ததியினரையும், சுற்றுச்சூழலையும் கருத்தில் கொண்டு இந்த அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது’ என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘பிளாஸ்டிக் பைகளை மொத்தமாக தடை செய்ய வேண்டும்’ என்பது தான் எங்களது தனிப்பட்ட கருத்து. அதேநேரம், தமிழக அரசு பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை பொதியப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு விலக்கு அளித்து இருப்பது ஏற்க முடியாது’ என்று கருத்து தெரிவித்தனர். பின்னர், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...