நீலகிரி : நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு சுற்றுலா வாகனங்களை இயக்க வேண்டும் என புதியதாக பொறுப்பேற்ற நீலகிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு சுற்றுலா வாகனங்களை இயக்க வேண்டும் என புதியதாக பொறுப்பேற்ற நீலகிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட போக்குவரத்து அலுவலராக கதிரவன் பொறுப்பேற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து, இன்று மாவட்டம் முழுவதும் உள்ள மாக்ஸிகேப், சுற்றுலா வாகன ஓட்டிகள், மினி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், வரும் 2019 ஆண்டு முதல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முழுவதும் கணினிமையம் ஆக்கப்பட்டுள்ளதை அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, வரும் 2019-ம் ஆண்டு முதல் வாகனங்களுக்கான வரிகள், புதுப்பித்தல் கட்டணங்கள், லைசென்ஸ்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் செயல்பட போவதாகவும், இதனால், பொதுமக்கள் காலதாமதத்தை தவிர்த்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், மாவட்ட போக்குவரத்து அலுவலர் கதிரவன் தெரிவிக்கையில், "நீலகிரி மாவட்டம் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டம் என்பதால் அனைத்து வாகன ஓட்டிகளும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த சேவையை அளிக்க வேண்டும். மினி பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் கட்டுப்பாட்டுடன் வாகனங்களை இயக்க வேண்டும், என்றார்.

இந்தக் கூட்டத்தில் மாக்ஸிகேப் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், மினிபஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.