டெல்லி : வரும் 2018-19-ம் ஆண்டிற்கான அடிப்படை மானியமான ரூ. 1,753.87 கோடியை விடுவிக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமரிடம் தமிழக அரசு சார்பில் மனு அளிக்கப்பட்டது.
டெல்லி : வரும் 2018-19-ம் ஆண்டிற்கான அடிப்படை மானியமான ரூ. 1,753.87 கோடியை விடுவிக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமரிடம் தமிழக அரசு சார்பில் மனு அளிக்கப்பட்டது.
டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் தமிழக அரசின் பல்வேறு கோரிக்கை மனுக்களை மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து அளித்து வருகிறார்.
இந்த நிலையில், மத்திய ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் நரேந்திரசிங் டோமரை இன்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது, 14-வது மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி, மத்திய அரசு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுவிக்கப்பட வேண்டிய 2017-18-ம் ஆண்டிற்கான செயலாக்க மானியம் ரூ.194.78 கோடி மற்றும் 2018-19-ம் ஆண்டிற்கான அடிப்படை மானியம் ரூ.1,753.87 கோடியை விடுவித்தல் தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார்.
இதைத்தொடர்ந்து, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவை நேரில் சந்தித்து, கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் 627.89 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணியினை தொடர்ந்து மேற்கொள்ள வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பின் போது, நாடாளுமன்ற துணை சபாநாயகர் மு. தம்பிதுரை, மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்தியலிங்கம், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி. வேணுகோபால், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.