நீலகிரியில் காணப்படும் 'மலபார் ஜெயன்ட்ஸ் குரில்' அணில்கள் : சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளிப்பு

நீலகிரி : குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது அதிகளவில் காணப்படும் 'மலபார் ஜெயன்ட்ஸ் குரில்' என்ற அணில் இனங்கள் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.


நீலகிரி : குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது அதிகளவில் காணப்படும் 'மலபார் ஜெயன்ட்ஸ் குரில்' என்ற அணில் இனங்கள் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. 

குன்னுார் சிம்ஸ் பூங்காவின் நுழைவு வாயில் அருகே மரக்கிளைகளில் அண்மைக்காலமாக மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் 'மலபார் ஜெயன்ட்ஸ் குரில்' என்ற அணில் வகைகள், அதிகளவு காணப்படுகிறது. இது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இவை அதிகரித்து காணப்படுகிறது.

இதே போன்று, கோத்தகிரியில் உள்ள லாங்வுட் சோலையில் இந்த அணில்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த அணில்கள் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ உலா வரும் இயல்புடையது. இவை சீதாபழங்களை அதிக அளவு விரும்பி உண்ணுவதால், சீதாப்பழ மரங்களில் அதிகம் காணப்படும் இடங்களில் காணப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு காணப்படும் இதுபோன்ற அரிய வகை மலபார் அணில்களை வனத்துறையினர் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...