புத்தாண்டு கொண்டாட்டம் : மது போதையில் வரும் வாகன ஓட்டிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து கோவை போலீசார் அதிரடி

கோவை : கோவையில் மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்ட சமயத்தில் மது போதையில் வரும் வாகன ஓட்டிகளைப் பிடிக்க 22 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கோவை : கோவையில் மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்ட சமயத்தில் மது போதையில் வரும் வாகன ஓட்டிகளைப் பிடிக்க 22 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ஆங்கில புத்தாண்டு பண்டிகை வரும் செவ்வாய்கிழைமை கொண்டாடப்பட உள்ளது. இந்த கொண்டாட்ட நிகழ்வுகளின் போது, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் தலைமையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணிகளில் துணை ஆணையர்கள் பாலாஜி சரவணன், பெருமாள், சுஜித்குமார் ஆகியோர் மேற்பார்வையில் வரும் 31 -ம் தேதி இரவு முதல் மறுநாள் அதிகாலை 6 மணி வரை மாநகரில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. 

இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளில் 200 ஆயுதப்படை போலீசார் மற்றும் 150 ஊர்காவல் படையினரும் ஈடுபடுகின்றனர். வடகோவை, அவினாசி சாலை, நஞ்சப்பா சாலை ஆகிய இடங்களில் உள்ள மேம்பாலங்களில் வாகன போக்குவரத்து 31 -ம் தேதி இரவு தடை செய்யப்படும். கொடிசியா, பார்க் கேட் சிக்னல், ரேஸ்கோர்ஸ், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட 9 இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

மேலும், கோவை மாநகரில் உள்ள 62 கிறிஸ்துவ தேவாலயங்கள், 30 நட்சத்திர ஓட்டல்கள் அருகே போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. முக்கிய இடங்களில் தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் தயார் நிலையில் நிறுத்தப்படும். குறிப்பாக மது போதையில் வாகனம் ஓட்டி வருபவர்களைப் பிடிக்க 22 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தனிப்படையினர், மதுபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்களைப் பிடித்து அறிவுரை கூறி, போதை தெளிந்தவுடன் அனுப்பி வைப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...