கோவை : உணவு வணிகர்கள் செலான் மூலம் பதிவு கட்டணத் தொகையை செலுத்துவதற்கான காலக்கெடு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது.
கோவை : உணவு வணிகர்கள் செலான் மூலம் பதிவு கட்டணத் தொகையை செலுத்துவதற்கான காலக்கெடு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- உணவு வணிகர்கள் மேற்கொள்ளும் உணவு வணிகத்திற்கு உரிமம் மற்றும் பதிவு மேற்கொள்ள அரசுக்கு செலுத்தப்படும் கட்டணத் தொகையானது கருவூல முத்திரையுடன் கூடிய வங்கி செலான் மூலம் கட்டணத் தொகை செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அனைவரும் இ-பேமெண்ட் ஆன்டிலைன் மூலமாகவே கட்டணம் செலுத்தி புதியதாக உரிமம் பெறுவது மற்றும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும், அனைத்து உணவு வணிகம் செய்யும் வணிகர்கள் அனைவரும் உரிமத்தைப் புதுப்பிக்க ஆன்லைன் முறையில் தான் கட்டணத் தொகை செலுத்த முடியும். இத்தொகையை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் போன்ற முறையில் ஆன்லைன் மூலமான செலுத்தினால் போதுமானது.
கருவூல முத்திரையுடன் கூடிய வங்கி செலான் மூலம் கட்டணம் செலுத்தும் முறை அனுமதிக்கப்படமாட்டாது. ஆகையால், செலான் ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே, அனைத்து உணவு வணிகர்களும் வரும் 20-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
இது குறித்து ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அலுவலகம் அல்லது நியமன அலுவலகர் அலுவலகத்தை/ உணவு பாதுகாப்பு பிரிவு பந்தய சாலை கோவை என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- உணவு வணிகர்கள் மேற்கொள்ளும் உணவு வணிகத்திற்கு உரிமம் மற்றும் பதிவு மேற்கொள்ள அரசுக்கு செலுத்தப்படும் கட்டணத் தொகையானது கருவூல முத்திரையுடன் கூடிய வங்கி செலான் மூலம் கட்டணத் தொகை செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அனைவரும் இ-பேமெண்ட் ஆன்டிலைன் மூலமாகவே கட்டணம் செலுத்தி புதியதாக உரிமம் பெறுவது மற்றும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும், அனைத்து உணவு வணிகம் செய்யும் வணிகர்கள் அனைவரும் உரிமத்தைப் புதுப்பிக்க ஆன்லைன் முறையில் தான் கட்டணத் தொகை செலுத்த முடியும். இத்தொகையை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் போன்ற முறையில் ஆன்லைன் மூலமான செலுத்தினால் போதுமானது.
கருவூல முத்திரையுடன் கூடிய வங்கி செலான் மூலம் கட்டணம் செலுத்தும் முறை அனுமதிக்கப்படமாட்டாது. ஆகையால், செலான் ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே, அனைத்து உணவு வணிகர்களும் வரும் 20-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
இது குறித்து ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அலுவலகம் அல்லது நியமன அலுவலகர் அலுவலகத்தை/ உணவு பாதுகாப்பு பிரிவு பந்தய சாலை கோவை என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.