கோவை : சாமிஐயர் புது வீதி அருகே தங்க நகை தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 45 சவரன் தங்க நகை திருடப்பட்டுள்ள சம்பவம் குறித்து பெரிய கடை வீதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை : சாமிஐயர் புது வீதி அருகே தங்க நகை தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 45 சவரன் தங்க நகை திருடப்பட்டுள்ள சம்பவம் குறித்து பெரிய கடை வீதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் அமைந்துள்ள சாமி ஐயர் புது வீதி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் தங்க பட்டறை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்றிரவு தனது குடும்பத்தினருடன் அருகிலுள்ள பூங்காவிற்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து, வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த நகை உட்பட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவத்தை அடுத்து கணேசன் உடனடியாக பெரியகடைவீதி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதற்கிடையில், வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 45 சவரன் தங்க நகை திருட்டு போய் இருப்பதாக தங்கநகை தொழிலாளி கணேசன் தெரிவித்தார். இது தொடர்பாக பெரியகடைவீதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கக்கூடிய வீதியில், மாலை நேரத்தில் நடந்த இத்திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் அமைந்துள்ள சாமி ஐயர் புது வீதி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் தங்க பட்டறை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்றிரவு தனது குடும்பத்தினருடன் அருகிலுள்ள பூங்காவிற்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து, வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த நகை உட்பட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவத்தை அடுத்து கணேசன் உடனடியாக பெரியகடைவீதி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதற்கிடையில், வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 45 சவரன் தங்க நகை திருட்டு போய் இருப்பதாக தங்கநகை தொழிலாளி கணேசன் தெரிவித்தார். இது தொடர்பாக பெரியகடைவீதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கக்கூடிய வீதியில், மாலை நேரத்தில் நடந்த இத்திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.