திருப்பூர் : திருப்பூரில் விளை நிலங்கள் வழியே மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தினை எதிர்த்துத் தொடர்ந்து 4 -வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில், 3 பேரின் உடல்நிலை மோசமானதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டனர் .
திருப்பூர் : திருப்பூரில் விளை நிலங்கள் வழியே மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தினை எதிர்த்துத் தொடர்ந்து 4 -வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில், 3 பேரின் உடல்நிலை மோசமானதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டனர் .
விவசாய நிலங்கள் வழியே கொண்டு செல்லப்படும் மின் கோபுரங்களுக்கு மாற்றாக நெடுஞ்சாலைத்துறை சாலைகளின் ஓரங்களில் புதைவடமாக கேபிள் லைன் மூலம் கொண்டு செல்ல வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து, திருப்பூர் மாவட்டம் கள்ளிப்பாளையத்தில் விவசாயிகள் தொடர்ந்து 10 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், தங்களின் போராட்டத்தை அரசு கண்டு கொள்ளவில்லை என கடந்த 4 தினங்களாக 18 விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் உடல்நிலை மோசமடைந்து மயக்கமடைந்த சிவக்குமார் என்ற விவசாயி இன்று காலை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மேலும், பழனிச்சாமி மற்றும் புஷ்பநாதன் ஆகியோர் உடல்நிலையும் மோசமடைந்ததால் அவர்களும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர் . இன்று காலை அடுத்தடுத்து 3 விவசாயிகள் உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், அரசு தங்கள் கோரிக்கைகளை ஏற்கும்வரை விவசாயிகள் தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரப் போவதில்லை என உறுதி தெரிவிக்கின்றனர்.