கோவை அரசு மருத்துவமனையில் திட்ட இயக்குனர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் உள்ள விரிவுரை கூடத்தில் 98 கோடி மதிப்பிலான கட்டுமான பணிகள் மற்றும் 189 கோடி மதிப்புள்ள உபகரணங்கள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் திட்ட இயக்குனர் தலைமையில் நடைபெற்றது.


கோவை : கோவை அரசு மருத்துவமனையில் உள்ள விரிவுரை கூடத்தில் 98 கோடி மதிப்பிலான கட்டுமான பணிகள் மற்றும் 189 கோடி மதிப்புள்ள உபகரணங்கள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் திட்ட இயக்குனர் தலைமையில் நடைபெற்றது.

கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, செலவினங்கள் மருத்துவமனை நடவடிக்கைகள் சேவை பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் சுகாதாரத்துறை பொறுப்பாளர்கள், மருத்துவமனையின் பொறுப்பாளர்கள், 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தினர், அமரர் ஊர்தி ரெட்கிராஸ் சொசைட்டியின் பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும், ஆய்வு கூட்டத்திற்கு பின் திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி கூறியதாவது:- கோவை அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் கடந்த ஆண்டைவிட ஒன்றரை கோடி அதிக வருவாயை கொடுத்துள்ளது. இந்த வருவாயை நல்ல விதத்தில் பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஜெய்க்கா நிதி உதவியுடன் தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் வர உள்ள கட்டிடத்திற்கான இடம் மற்றும் வரைபடங்கள் எல்லாம் குறித்தும் ஆலோசனைகள் செய்துள்ளோம். அதேபோல அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் முடிவு செய்துள்ளோம்.

108 சேவை, 104 ஹெல்ப்லைன், அமரர் ஊர்தி போன்ற சேவைகள் மக்களிடத்தில் சரியாக செல்ல வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. 108 சேவையை பொறுத்தவரை வளர்ந்த நாடுகளில் உள்ள ரெஸ்பான்ஸ் டைமுக்கு இணையாக, நகர்ப்புறங்களில் 8 நிமிடத்திற்கான ரெஸ்பான்ஸ் டைம் அடைந்துள்ளோம். கோவை ஆர்.டி.ஏ. ரெஸ்பான்ஸ் டைம் ஆனது 12 நிமிடம் ஆக உள்ளது. இந்த நேரத்தை குறைக்க ஊர்திகளை அதிகப்படுத்த உள்ளோம். அமரர் ஊர்தி சேவையானது 98% நல்லமுறையில் செயல்பட்டு வருகிறது. அதேபோல, பொதுமக்களின் சேவைக்காக வாகன எண்ணிக்கையும் அதிகரித்துள்ளோம். 

தனியார் வாகனத்திற்கு கட்டணம் கொடுத்து பொதுமக்கள் செல்வதை கட்டுப்படுத்த அரசின் சார்பில் அதிவேகமாக அமரர் ஊர்திகளை அதிகப்படுத்தி வருகிறோம். அரசு மருத்துவமனையில் காப்பீடு திட்டத்திற்காக ஒரே நபரின் பெயரில் இரண்டு என்ட்ரி போடப்படுவதாக எழுந்த புகார் ஆனது முற்றிலும் தவறானது, இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...