குன்னூர் ரயில்நிலையத்தில் ரயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு

நீலகிரி : தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மலைரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் ஆர்வம் காட்டுவதால், குன்னுார் ரயில் நிலையத்தில் ரயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்,

நீலகிரி : தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மலைரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் ஆர்வம் காட்டுவதால், குன்னுார் ரயில் நிலையத்தில் ரயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.



நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் உதகை மலைரயில் முக்கிய இடம் பெறுகிறது. ஆசியாவிலேயே உதகை மலைரயில் தான், பல்சக்கர தண்டவாளத்தைக் கொண்டது என்பதாலும், பயணத்தின் போது இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களால், இந்த ரயிலுக்கு யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய அந்தஸ்து வழங்கியது.

தற்போது, அரையாண்டு விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் மலைரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில், ரயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு குன்னுார் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.



பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது :- மலைரயிலில் ஜி.ஆர்.பி. செயலியை அறிமுகம் செய்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ரயில்வே காவல்துறை பணிகள் மேற்கொள்ள வேண்டும். திருட்டு நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதோடு, ரயில்வே எல்ப், செயலி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி திருட்டு போனால், புகார் அளிக்க பயணிகளுக்கு உதவ வேண்டும். பெண்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால், ரயிலில் உள்ள துப்பாக்கி ஏந்திய காவலர்கள் உதவி செய்வார்கள். ரயில் பயணம் முடித்து வீட்டிற்கு சென்ற பிறகும் இந்த செயலி மூலம் புகார் அளிக்கலாம், என்றார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...