கோவை : 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கோவை மண்டலமும் ஈடுபட்டுள்ளதால், மின் பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை : 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கோவை மண்டலமும் ஈடுபட்டுள்ளதால், மின் பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க கோவை மண்டல கூட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. கோவை மண்டல செயலாளர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மண்டலம் முழுவதும் இருந்து ஏராளமான மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றனர்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ. 350 ஊதியம், பணி அடையாள அட்டை, பணி பாதுகாப்பு உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை கடந்த ஓராண்டாக மின்வாரிய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றும், அதனை அமைச்சர் கண்டு கொள்ளவில்லை என ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கஜா புயல் ஏற்பட்டபோது துண்டித்த மின் இணைப்புகளை துரிதமாக வழங்க மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 8,000-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், சிறப்பாகப் பணிகளை முடித்த தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றும் என மின்துறை அமைச்சர் தெரிவித்தார். அதனை இம்மாதம் 24-ம் தேதி அமைச்சரவையில் முடிவு எடுக்கப்படும் என கூறினார்.
ஆனால், தங்களது கோரிக்கையை அரசு ஏற்று எவ்வித அறிவிப்பும் வெளியிடாமல் ஏமாற்றிவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர். மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது. இன்று முதல் கோவை மண்டல மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் இதில் பங்கேற்பதாகவும் அறிவித்துள்ளனர். மின்சார வாரியத்தில் 70 சதவீத பணிகள் ஒப்பந்த ஊழியர்களைக் கொண்டே நடைபெற்று வந்த நிலையில், ஊழியர்களின் இந்த வேலைநிறுத்தத்தால் கோவை மண்டல மின் பணிகள் முற்றிலும் முடங்கும் நிலை உருவாகி உள்ளது.
தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க கோவை மண்டல கூட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. கோவை மண்டல செயலாளர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மண்டலம் முழுவதும் இருந்து ஏராளமான மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றனர்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ. 350 ஊதியம், பணி அடையாள அட்டை, பணி பாதுகாப்பு உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை கடந்த ஓராண்டாக மின்வாரிய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றும், அதனை அமைச்சர் கண்டு கொள்ளவில்லை என ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கஜா புயல் ஏற்பட்டபோது துண்டித்த மின் இணைப்புகளை துரிதமாக வழங்க மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 8,000-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், சிறப்பாகப் பணிகளை முடித்த தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றும் என மின்துறை அமைச்சர் தெரிவித்தார். அதனை இம்மாதம் 24-ம் தேதி அமைச்சரவையில் முடிவு எடுக்கப்படும் என கூறினார்.
ஆனால், தங்களது கோரிக்கையை அரசு ஏற்று எவ்வித அறிவிப்பும் வெளியிடாமல் ஏமாற்றிவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர். மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது. இன்று முதல் கோவை மண்டல மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் இதில் பங்கேற்பதாகவும் அறிவித்துள்ளனர். மின்சார வாரியத்தில் 70 சதவீத பணிகள் ஒப்பந்த ஊழியர்களைக் கொண்டே நடைபெற்று வந்த நிலையில், ஊழியர்களின் இந்த வேலைநிறுத்தத்தால் கோவை மண்டல மின் பணிகள் முற்றிலும் முடங்கும் நிலை உருவாகி உள்ளது.