டெல்லி : கஜா புயல் நிவாரணம் நிதியை வழங்கக் கோரி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து தமிழக அமைச்சர்கள் மனு அளித்தனர்.
டெல்லி : கஜா புயல் நிவாரணம் நிதியை வழங்கக் கோரி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து தமிழக அமைச்சர்கள் மனு அளித்தனர்.
தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களுடன் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி, நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் டெல்லி சென்றனர். அங்கு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்த அவர்கள், கஜா புயல் நிவாரண நிதி வழங்கக் கோரி மனு அளித்தனர்.
மேலும், 14-வது மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மேம்பாட்டுப் பணிகளுக்காக 2017-18-ம் ஆண்டின் நிலுவைத் தொகை ரூ. 560.15 கோடியும், 2018-19-ம் ஆண்டிற்கான 3,216.05 கோடியை உடனடியாக விடுவிக்கக் கோரி அவர்கள் வலியுறுத்தினர்.
தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களுடன் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி, நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் டெல்லி சென்றனர். அங்கு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்த அவர்கள், கஜா புயல் நிவாரண நிதி வழங்கக் கோரி மனு அளித்தனர்.
மேலும், 14-வது மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மேம்பாட்டுப் பணிகளுக்காக 2017-18-ம் ஆண்டின் நிலுவைத் தொகை ரூ. 560.15 கோடியும், 2018-19-ம் ஆண்டிற்கான 3,216.05 கோடியை உடனடியாக விடுவிக்கக் கோரி அவர்கள் வலியுறுத்தினர்.