விருதுநகரில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. தொற்று ரத்தத்தை தானமாக வழங்கிய இளைஞர் தற்கொலை முயற்சி

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்ட எச்.ஐ.வி. தொற்று ரத்தத்தை தானமாக வழங்கிய இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்ட எச்.ஐ.வி. தொற்று ரத்தத்தை தானமாக வழங்கிய இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கடந்த 3-ம் தேதியன்று எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் ரத்தம் செலுத்தப்பட்டிருக்கிறது. அப்போது தனக்கு செலுத்தப்பட்டது எச்.ஐ.வி. பாதிப்பு ரத்தம்தான் என அந்தப் பெண்ணுக்கு தெரியாது. பின்னர், வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக தனியார் மருத்துவனையில் சோதித்து பார்த்தபோது, கர்ப்பிணியின் ரத்தம் எச்.ஐ.வி. பாசிட்டிவ் என தெரியவந்தது. 

இதையடுத்து, இந்த சம்பவம் பெரும் பூதாகரமாகியது. பின்னர், நடத்தப்பட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட இளைஞர் 2 ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவமனையில் ரத்த தானம் செய்திருக்கிறார். அப்போதே அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருந்துள்ளது. ஆனால் அதுபற்றி அவரிடம் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. 

பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், பணியின்போது கவனக்குறைவாக இருந்த சிவகாசி அரசு மருத்துவமனை ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து வருகிறோம். இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. கருவில் இருக்கும் குழந்தைக்கு எச்.ஐ.வி. வராமல் தடுக்க சிகிச்சை அளிக்கப்படும், எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்ட எச்.ஐ.வி. தொற்று ரத்தத்தை தானமாக வழங்கிய இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தீவிர மருத்துவப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...