கோவை : மேட்டுப்பாளையத்தில் போதை பொருட்களுக்கு எதிராக கிராமிய ஆடல், பாடல் கலைநிகழ்சிகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
கோவை : மேட்டுப்பாளையத்தில் போதை பொருட்களுக்கு எதிராக கிராமிய ஆடல், பாடல் கலைநிகழ்சிகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மது மற்றும் கள்ளசாராயம் போன்ற போதை வஸ்த்துக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், மேட்டுப்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட நகர மற்றும் கிராமப்புறங்களில், தமிழக அரசின் மதுவிலக்கு காவல்துறை மற்றும் ஆயத்தீர்வுத்துறை சார்பில் போதை பொருட்களுக்கு ஏதிரான விழிப்புணர்வு கலை நிகழ்சிகள் நடத்தப்பட்டன.

மேட்டுப்பாளையத்தில் பேருந்து நிலையம், சந்தைக்கடை, நடூர், ஓடந்துறை உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட பகுதிகளில் கிராமிய பாடல்கள் மற்றும் நடனங்கள் ஆடி கலைக்குழுவினர் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். “போதை ஏறினால் பாதை மாறும், பாதை மாறினால் வாழ்வு நாசமாகும்” என கிராமப்புற பாடல்களை பாடியும், அதற்கேற்ற நடனங்களை ஆடியும் காண்போரை கவரும் வகையில் கலை நிகழ்சிகள் அமைந்தன.
இது தவிர பொய்க்கால் குதிரை ஆட்டம், தப்பாட்டம், கரக்காட்டம், கட்டைக்கால் ஆட்டம் என அனைவரையும் ஈர்க்கும் விதமாக சாலையோரங்களில் கிராமப்புற நடனங்கள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் வாகன விபத்து மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் போதை பழக்கத்தால் அதிகரித்து வருவது குறித்து விவரிக்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மது மற்றும் கள்ளசாராயம் போன்ற போதை வஸ்த்துக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், மேட்டுப்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட நகர மற்றும் கிராமப்புறங்களில், தமிழக அரசின் மதுவிலக்கு காவல்துறை மற்றும் ஆயத்தீர்வுத்துறை சார்பில் போதை பொருட்களுக்கு ஏதிரான விழிப்புணர்வு கலை நிகழ்சிகள் நடத்தப்பட்டன.

மேட்டுப்பாளையத்தில் பேருந்து நிலையம், சந்தைக்கடை, நடூர், ஓடந்துறை உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட பகுதிகளில் கிராமிய பாடல்கள் மற்றும் நடனங்கள் ஆடி கலைக்குழுவினர் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். “போதை ஏறினால் பாதை மாறும், பாதை மாறினால் வாழ்வு நாசமாகும்” என கிராமப்புற பாடல்களை பாடியும், அதற்கேற்ற நடனங்களை ஆடியும் காண்போரை கவரும் வகையில் கலை நிகழ்சிகள் அமைந்தன.
இது தவிர பொய்க்கால் குதிரை ஆட்டம், தப்பாட்டம், கரக்காட்டம், கட்டைக்கால் ஆட்டம் என அனைவரையும் ஈர்க்கும் விதமாக சாலையோரங்களில் கிராமப்புற நடனங்கள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் வாகன விபத்து மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் போதை பழக்கத்தால் அதிகரித்து வருவது குறித்து விவரிக்கப்பட்டது.