நீலகிரியில் பாரம்பரிய ஹெத்தையம்மன் கோவில் திருவிழா இன்று கோலாகலமாகத் தொடக்கம்

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஸ்ரீ ஹெத்தையம்மன் கோவில் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது.


நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஸ்ரீ ஹெத்தையம்மன் கோவில் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது. 

ஒருவார காலம் நடைபெறும் இத்திருவிழாவின் தொடக்கத்தை குறிக்கும் வகையில், கோத்தகிரி கேர்பெட்டா ஹெத்தையம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இத்திருவிழாவையொட்டி, படுகர் இன மக்கள் ஒருவார காலம் விரதமிருந்து தூய்மைக்கு இலக்கணமான பாரம்பரிய வெண்ணிற ஆடையணிந்து ஸ்ரீ ஹெத்தையம்மன் கோயிலுக்கு நடைப்பயணமாக சென்று ஒற்றை நாணயத்தை காணிக்கையாக செலுத்தி வழிபடுவது இந்த விழாவின் சிறப்பம்சமாகும். 



 

அதேபோல, மாவட்டத்தில் பெத்தளா, நுந்தளா, ஒன்னதலை, ஜெகதளா உள்ளிட்ட பல்வேறு கிராம கோயில்களில் இருந்து ஸ்ரீ ஹெத்தையம்மன் பயன்படுத்தியதாக கருதப்படும் புனித பிரம்பை ஏந்தி நடைப்பயணமாக பல கிலோ மீட்டர் தூரம் சென்று அம்மனை வழிபட்டால் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகம். 

இத்திருவிழாவின், முக்கிய நிகழ்ச்சியான பேரகணி கோயிலில் திருவிழா நடைபெற்றதைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை என்பதால் பல்வேறு கிராமங்களில் இருந்து படுகர் இனமக்கள் பெருமளவு கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...