கோவை : பாலக்காடு பிரதான சாலை மற்றும் சுண்டக்காமுத்தூர், புட்டுவிக்கி சாலைகளை இணைக்கும் வகையில் ரூ. 11.83 கோடி மதிப்பீட்டில் வாய்க்கால் தடுப்புச்சுவருடன் கூடிய புதிய தார்சாலையை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.
கோவை : பாலக்காடு பிரதான சாலை மற்றும் சுண்டக்காமுத்தூர், புட்டுவிக்கி சாலைகளை இணைக்கும் வகையில் ரூ. 11.83 கோடி மதிப்பீட்டில் வாய்க்கால் தடுப்புச்சுவருடன் கூடிய புதிய தார்சாலையை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.
கோவை மாநகராட்சியில் தெற்கு மண்டலம் வார்டு எண் 87-க்குட்பட்ட பாலக்காடு பிரதான சாலை மற்றும் சுண்டக்காமுத்தூர், புட்டுவிக்கி சாலைகளை இணைக்கும் வகையில் ரூ. 11.83 கோடி மதிப்பீட்டில் வாய்க்கால் தடுப்புச்சுவருடன் கூடிய 2.20 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய தார்சாலையை இன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது :- தொழில்வளர்ச்சிக்கு ஏற்றவகையில் மக்கள் பெருக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. எனவே, மாநகரப் பகுதிகளில் மக்கள் பெருக்கத்திற்கு ஏற்ற வகையில் சிறப்பான திட்டமிடுதலுடன் சாலைப்போக்குவரத்தினை மேம்படுத்திட வேண்டும் என்ற வகையில், அதிகளவிலான நிதிகள் ஒதுக்கப்பட்டு வருகிறது.
பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர, சாலை கட்டமைப்பு மேம்பாடு வழி வகுக்கிறது. பொதுமக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்த சாலைக் கட்டமைப்பு வசதிகள் பெரிதும் துணை புரிகின்றன. அதன் அடிப்படையில், இன்று கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 87-க்குட்பட்ட பாலக்காடு பிரதான சாலை மற்றும் சுண்டாக்கமுத்தூர் புட்டுவிக்கி சாலைகளை இணைக்க வாய்க்கால் தடுப்புச்சுவருடன் கூடிய 2.20 கிலோ மீட்டர் நீளத்தில் ரூ. 11.83 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய தார்சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சாலைகளை ஒளிரூட்டும் விதமாக ரூ. 80லட்சம் மதிப்பீட்டில், புதிதாக மின்கம்பங்களுடன் கூடிய எல்.இ.டி. தெருவிளக்குகள் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைவில் முழுவதுமாக கட்டிமுடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அளிக்கப்படும், இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் காந்திமதி, மாநகர பொறியாளர் ஆ.லட்சுமணன், செயற்பொறியாளர் ஞானவேல், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரா.ரவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கோவை மாநகராட்சியில் தெற்கு மண்டலம் வார்டு எண் 87-க்குட்பட்ட பாலக்காடு பிரதான சாலை மற்றும் சுண்டக்காமுத்தூர், புட்டுவிக்கி சாலைகளை இணைக்கும் வகையில் ரூ. 11.83 கோடி மதிப்பீட்டில் வாய்க்கால் தடுப்புச்சுவருடன் கூடிய 2.20 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய தார்சாலையை இன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது :- தொழில்வளர்ச்சிக்கு ஏற்றவகையில் மக்கள் பெருக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. எனவே, மாநகரப் பகுதிகளில் மக்கள் பெருக்கத்திற்கு ஏற்ற வகையில் சிறப்பான திட்டமிடுதலுடன் சாலைப்போக்குவரத்தினை மேம்படுத்திட வேண்டும் என்ற வகையில், அதிகளவிலான நிதிகள் ஒதுக்கப்பட்டு வருகிறது.
பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர, சாலை கட்டமைப்பு மேம்பாடு வழி வகுக்கிறது. பொதுமக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்த சாலைக் கட்டமைப்பு வசதிகள் பெரிதும் துணை புரிகின்றன. அதன் அடிப்படையில், இன்று கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 87-க்குட்பட்ட பாலக்காடு பிரதான சாலை மற்றும் சுண்டாக்கமுத்தூர் புட்டுவிக்கி சாலைகளை இணைக்க வாய்க்கால் தடுப்புச்சுவருடன் கூடிய 2.20 கிலோ மீட்டர் நீளத்தில் ரூ. 11.83 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய தார்சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சாலைகளை ஒளிரூட்டும் விதமாக ரூ. 80லட்சம் மதிப்பீட்டில், புதிதாக மின்கம்பங்களுடன் கூடிய எல்.இ.டி. தெருவிளக்குகள் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைவில் முழுவதுமாக கட்டிமுடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அளிக்கப்படும், இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் காந்திமதி, மாநகர பொறியாளர் ஆ.லட்சுமணன், செயற்பொறியாளர் ஞானவேல், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரா.ரவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.