கோவை : ஜனவரி முதல் தமிழக அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ள நிலையில், எட்டு மாவட்டத்தைச் சேர்ந்த போலீசாரும் பிளாஸ்டிக்கை கட்டாயமாக பயன்படுத்தக் கூடாது என மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா தெரிவித்துள்ளார்.
கோவை : ஜனவரி முதல் தமிழக அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ள நிலையில், எட்டு மாவட்டத்தைச் சேர்ந்த போலீசாரும் பிளாஸ்டிக்கை கட்டாயமாக பயன்படுத்தக் கூடாது என மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது :- தமிழக அரசு ஜனவரி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு காவல்துறை மேற்கு மண்டலத்தின் கீழ் உள்ள கோவை, திருப்பூர், சேலம், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களிலும் காவல்துறையினரும், அவர்களது குடும்பத்தினரும் பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்ட போலீஸாருக்கும் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆணையாளர்கள் மூலம் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காவல்நிலைய உணவகங்களிலும் பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக துணிப்பைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமானது. எனவே, ஜனவரி முதல் தங்கள் பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பது தெரியவந்தால் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்துக்கு பொதுமக்கள் தயங்காமல் புகார் தெரிவிக்கலாம்.
நகை பறிப்பு, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோர் ஊரகப் பகுதிகளில் தனியாக இருக்கும் முதியவர்களைக் குறி வைத்து குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. இதைக் கருத்தில் கொண்டு எட்டு மாவட்டங்களிலும் ஊரகப் பகுதிகளில் உள்ள முதியவர்கள் குறித்த விபரங்களைச் சேகரிக்க போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கு பிறந்தநாள், திருமணநாள் உள்ளிட்ட நாள்களில் விடுப்பு அளிப்பதற்காக அதுதொடர்பான விவரங்களைச் சேகரித்து வருகிறோம். இதன்மூலம். சம்பந்தப்பட்ட நாள்களில் அவர்களுக்கு முன்கூட்டியே விடுப்பு வழங்கப்படும், என்றார்.
இது குறித்து அவர் கூறியதாவது :- தமிழக அரசு ஜனவரி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு காவல்துறை மேற்கு மண்டலத்தின் கீழ் உள்ள கோவை, திருப்பூர், சேலம், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களிலும் காவல்துறையினரும், அவர்களது குடும்பத்தினரும் பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்ட போலீஸாருக்கும் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆணையாளர்கள் மூலம் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காவல்நிலைய உணவகங்களிலும் பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக துணிப்பைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமானது. எனவே, ஜனவரி முதல் தங்கள் பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பது தெரியவந்தால் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்துக்கு பொதுமக்கள் தயங்காமல் புகார் தெரிவிக்கலாம்.
நகை பறிப்பு, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோர் ஊரகப் பகுதிகளில் தனியாக இருக்கும் முதியவர்களைக் குறி வைத்து குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. இதைக் கருத்தில் கொண்டு எட்டு மாவட்டங்களிலும் ஊரகப் பகுதிகளில் உள்ள முதியவர்கள் குறித்த விபரங்களைச் சேகரிக்க போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கு பிறந்தநாள், திருமணநாள் உள்ளிட்ட நாள்களில் விடுப்பு அளிப்பதற்காக அதுதொடர்பான விவரங்களைச் சேகரித்து வருகிறோம். இதன்மூலம். சம்பந்தப்பட்ட நாள்களில் அவர்களுக்கு முன்கூட்டியே விடுப்பு வழங்கப்படும், என்றார்.