திருப்பூர் : திருப்பூர் அருகே மயான வசதி செய்து தரக்கோரி பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர் : திருப்பூர் அருகே மயான வசதி செய்து தரக்கோரி பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தாராபுரத்தை அடுத்த மரவபாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் மயான வசதி இல்லாத காரணத்தால் இறந்தவர்களின் உடல்களை அப்பகுதியில் உள்ள சாலையோரத்தில் அடக்கம் செய்து வருகின்றனர். மேலும், இறந்தவர்களின் உடல்களை புதைக்கும் இடங்கள் முட்புதர்களால் சூழ்ந்து இருப்பதாகவும், இதனை சுத்தம் செய்வதற்கு சிரமம் ஏற்படுவதோடு, மின்விளக்கு, தடுப்பு சுவர் இல்லாத காரணத்தால் உடல்களை எடுத்து வருபவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருந்து வருவதாக கூறுகின்றனர்.
எனவே மயானமாக பயன்படுத்தும் இடத்தில், தடுப்பு சுவர், மின்விளக்கு உள்ளிட்ட வசதிகளை செய்து தரக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
தாராபுரத்தை அடுத்த மரவபாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் மயான வசதி இல்லாத காரணத்தால் இறந்தவர்களின் உடல்களை அப்பகுதியில் உள்ள சாலையோரத்தில் அடக்கம் செய்து வருகின்றனர். மேலும், இறந்தவர்களின் உடல்களை புதைக்கும் இடங்கள் முட்புதர்களால் சூழ்ந்து இருப்பதாகவும், இதனை சுத்தம் செய்வதற்கு சிரமம் ஏற்படுவதோடு, மின்விளக்கு, தடுப்பு சுவர் இல்லாத காரணத்தால் உடல்களை எடுத்து வருபவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருந்து வருவதாக கூறுகின்றனர்.
எனவே மயானமாக பயன்படுத்தும் இடத்தில், தடுப்பு சுவர், மின்விளக்கு உள்ளிட்ட வசதிகளை செய்து தரக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்