கோவை : குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியநாராயண பகுதி மக்களைத் தொடர்ந்து, கதிரவன் நகர் மக்களும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை : குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியநாராயண பகுதி மக்களைத் தொடர்ந்து, கதிரவன் நகர் மக்களும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 95-வது வார்டு கதிரவன் நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், தங்கள் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
பின்னர் அவர்கள் கூறியதாவது :- கதிரவன் நகர் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தங்களது பகுதியில் கழிவுநீர் சோக்பிட் அமைத்து வெளியேற்றி வருகின்றனர். மற்ற பகுதிகளில் வெளியேறும் கழிவுகளை வாய்க்காலில் விடப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், இப்பகுதியில் உள்ள பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 7.5 செண்ட் இடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வரும் நிலையில், அதனை அகற்றிவிட்டு கழிவுநீர் நிலையம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேறு இடத்தில் இதனை அமைக்க வேண்டும், இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடந்த வாரம் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் சத்தியநாராயண பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இதே காரணத்தை வலியுறுத்தி மனு அளித்தனர்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 95-வது வார்டு கதிரவன் நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், தங்கள் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
பின்னர் அவர்கள் கூறியதாவது :- கதிரவன் நகர் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தங்களது பகுதியில் கழிவுநீர் சோக்பிட் அமைத்து வெளியேற்றி வருகின்றனர். மற்ற பகுதிகளில் வெளியேறும் கழிவுகளை வாய்க்காலில் விடப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், இப்பகுதியில் உள்ள பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 7.5 செண்ட் இடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வரும் நிலையில், அதனை அகற்றிவிட்டு கழிவுநீர் நிலையம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேறு இடத்தில் இதனை அமைக்க வேண்டும், இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடந்த வாரம் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் சத்தியநாராயண பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இதே காரணத்தை வலியுறுத்தி மனு அளித்தனர்.