திருப்பூர் : உடுமலை ராணுவப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்த மாணவா்களுக்கு வழியனுப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக நிகழ்ந்த ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
திருப்பூர் : உடுமலை ராணுவப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்த மாணவா்களுக்கு வழியனுப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக நிகழ்ந்த ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி நகரில் அமைந்துள்ள சைனிக் ராணுவ பள்ளியில் பிளஸ்-2 முடித்து செல்லும் மாணவர்களுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. இதில், சூலூா் விமானப்படை தளத்திலிருந்து கொண்டுவரப்பட்ட 4 ஹெலிகாப்டா்கள் மூலம் சாகச நிகழ்ச்சிகள் மற்றும் மாணவர்கள் நடத்திய அணிவகுப்பு மரியாதை நிகழ்வு நடைபெற்றது. இதில், ஏர் வைஸ் மார்சல் எல்.என்.சர்மா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அணி வகுப்பு மரியாதையை ஏற்றார்.

மத்திய பாதுகாப்புத்துறை மற்றும் மாநில அரசுகள் இணைந்து நாடு முழுவதும் 28 இடங்களில் சைனிக் ராணுவப் பள்ளிகளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் உடுமலை அருகே அமராவதி நகரில் இந்த சைனிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ராணுவத்தில் சேருவதற்கான ஊக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் துப்பாக்கி சுடுதல், மலையேற்றம், குதிரை சவாரி, ஹெலிகாப்டா் இயக்கும் பயிற்சி உள்ளிட்ட ராணுவம் சார்ந்த பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் வருங்காலங்களில் சிறந்த ராணுவ அதிகாரிகளாக விளங்கும் வகையில் பாடத்திட்டங்கள், பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு 12-ம் வகுப்பு முடித்து செல்லும் மாணவர்களின் பாசிங் அவுட் பரேடு மற்றும் சாரங்கி ஏரோபிக் எனும் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு கல்வியில் சிறந்த மாணவர், உடற்பயிற்சியில் சிறந்த மாணவர்களுக்கு கேடயங்களை வழங்கி ஏர் வைஸ் மார்சல் பாராட்டினார். பின்னர், சூலூர் விமானப்படை அதிகாரிகளால் சாரங்கி ஏரோபிக் எனும் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், விமானப்படை வீரர்கள் வானத்தில் சாகசங்களை நிகழ்த்தி காட்டியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி நகரில் அமைந்துள்ள சைனிக் ராணுவ பள்ளியில் பிளஸ்-2 முடித்து செல்லும் மாணவர்களுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. இதில், சூலூா் விமானப்படை தளத்திலிருந்து கொண்டுவரப்பட்ட 4 ஹெலிகாப்டா்கள் மூலம் சாகச நிகழ்ச்சிகள் மற்றும் மாணவர்கள் நடத்திய அணிவகுப்பு மரியாதை நிகழ்வு நடைபெற்றது. இதில், ஏர் வைஸ் மார்சல் எல்.என்.சர்மா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அணி வகுப்பு மரியாதையை ஏற்றார்.

மத்திய பாதுகாப்புத்துறை மற்றும் மாநில அரசுகள் இணைந்து நாடு முழுவதும் 28 இடங்களில் சைனிக் ராணுவப் பள்ளிகளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் உடுமலை அருகே அமராவதி நகரில் இந்த சைனிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ராணுவத்தில் சேருவதற்கான ஊக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் துப்பாக்கி சுடுதல், மலையேற்றம், குதிரை சவாரி, ஹெலிகாப்டா் இயக்கும் பயிற்சி உள்ளிட்ட ராணுவம் சார்ந்த பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் வருங்காலங்களில் சிறந்த ராணுவ அதிகாரிகளாக விளங்கும் வகையில் பாடத்திட்டங்கள், பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு 12-ம் வகுப்பு முடித்து செல்லும் மாணவர்களின் பாசிங் அவுட் பரேடு மற்றும் சாரங்கி ஏரோபிக் எனும் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு கல்வியில் சிறந்த மாணவர், உடற்பயிற்சியில் சிறந்த மாணவர்களுக்கு கேடயங்களை வழங்கி ஏர் வைஸ் மார்சல் பாராட்டினார். பின்னர், சூலூர் விமானப்படை அதிகாரிகளால் சாரங்கி ஏரோபிக் எனும் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், விமானப்படை வீரர்கள் வானத்தில் சாகசங்களை நிகழ்த்தி காட்டியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.