கோவை : கோவையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 31 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ. 13.80 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
கோவை : கோவையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 31 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ. 13.80 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
கோவில்பாளையம் அருகேயுள்ள விளாங்குறிச்சி பகுதியில் அடிக்கடி சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு அண்மையில் தகவல் கிடைத்தது. அதன்பேரில், கோவில்பாளையம் போலீஸார் அப்பகுதியில் இருந்த ஜெயபால் என்பவரது வீட்டில் திடீரென சோதனையிட சென்றனர்.
இதையடுத்து, வீட்டைச் சுற்றி வளைத்து வீட்டுக்குள் சோதனையிட்டனர். அதில், வீட்டின் அனைத்து அறைகளும் 4 முதல் 5 பேர் அமர்ந்து சூதாடும் அளவுக்கு சிறு, சிறு அறைகளாக மாற்றப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட வீட்டின் உரிமையாளர் ஜெயபால் மற்றும் அவரது நண்பர் முத்து உள்பட 31 பேரைப் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.13 லட்சத்து 80 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பிச்சென்ற சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவில்பாளையம் அருகேயுள்ள விளாங்குறிச்சி பகுதியில் அடிக்கடி சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு அண்மையில் தகவல் கிடைத்தது. அதன்பேரில், கோவில்பாளையம் போலீஸார் அப்பகுதியில் இருந்த ஜெயபால் என்பவரது வீட்டில் திடீரென சோதனையிட சென்றனர்.
இதையடுத்து, வீட்டைச் சுற்றி வளைத்து வீட்டுக்குள் சோதனையிட்டனர். அதில், வீட்டின் அனைத்து அறைகளும் 4 முதல் 5 பேர் அமர்ந்து சூதாடும் அளவுக்கு சிறு, சிறு அறைகளாக மாற்றப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட வீட்டின் உரிமையாளர் ஜெயபால் மற்றும் அவரது நண்பர் முத்து உள்பட 31 பேரைப் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.13 லட்சத்து 80 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பிச்சென்ற சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.