தமிழின உரிமை மீட்பு மாநாட்டையொட்டி 150-க்கும் மேற்பட்ட திராவிட அமைப்புகளின் சார்பில் திருச்சியில் இன்று கருஞ்சட்டை பேரணி நடந்தது.
தமிழின உரிமை மீட்பு மாநாட்டையொட்டி 150-க்கும் மேற்பட்ட திராவிட அமைப்புகளின் சார்பில் திருச்சியில் இன்று கருஞ்சட்டை பேரணி நடந்தது.
தந்தை பெரியாரின் நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு தினத்தையொட்டி பெரியார் சிந்தனைகளை விளக்கும் வகையில் கருஞ்சட்டை பேரணி மற்றும் மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது. உறையூர் சாலையில் இருந்து உழவர் சந்தையை நோக்கி நடந்த இந்தப் பேரணியில், மே 17 இயக்கம், திராவிடர் விடுதலை கழகம், உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்றன. இதில், பெரியாரிய உணர்வுள்ள ஏராளமான இளைஞர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், பேரணியில் தாரை, தப்பட்டை வாசித்தவாறே பெரியாரியம் குறித்த முழக்கங்களை எழுப்பினர்.
தந்தை பெரியாரின் நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு தினத்தையொட்டி பெரியார் சிந்தனைகளை விளக்கும் வகையில் கருஞ்சட்டை பேரணி மற்றும் மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது. உறையூர் சாலையில் இருந்து உழவர் சந்தையை நோக்கி நடந்த இந்தப் பேரணியில், மே 17 இயக்கம், திராவிடர் விடுதலை கழகம், உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்றன. இதில், பெரியாரிய உணர்வுள்ள ஏராளமான இளைஞர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், பேரணியில் தாரை, தப்பட்டை வாசித்தவாறே பெரியாரியம் குறித்த முழக்கங்களை எழுப்பினர்.