ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்தது மகிழ்ச்சி : கோவையில் நடிகை குஷ்பு பேட்டி

கோவை : ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்மொழிந்தது மகிழ்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.


கோவை : ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்மொழிந்தது மகிழ்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் 22-வது மாநில மாநாடு இன்று தொடங்கியது. இதில், பங்கேற்ற பிறகு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:- தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் சங்க அலுவலகத்தை பூட்டியதும் விஷால் கைது செய்யபட்டது ஜனநாயகத்திற்கு எதிரானது. மேலும், விஷால் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை. உயர்நீதிமன்றம் மூலம் விஷாலுக்கும், தயாரிப்பாளர் சங்கத்தினருக்கும் வெற்றி கிடைத்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு இருந்துள்ளது. அரசியல் தலையீடு இல்லாமல் காவல்துறை எப்படி வந்தது..?. தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் எதிர் அணியில் இருப்பவர்களில் ஒருவர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர். மற்றொருவர் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர். இதனால், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது போல் இந்த இரு நாட்கள் சம்பவம் இருந்தது,என்றார். 



பிரதமர் வேட்பாளர் தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கையில், இது நேரம் வரும்போது தான் முடிவு செய்ய வேண்டிய விஷயம். யாரும் ராகுல்காந்தி பிரதமராக வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ராகுல்காந்தியை முன்மொழிந்தது மகிழ்ச்சியளிக்கிறது. இதுவரை ராகுல்காந்தி பிரதமர் என காங்கிரஸ் கட்சியில் இருந்து சொல்லப்படவில்லை. அனைவரது தகவல்களை கணினியில் எடுக்கலாம் என மத்திய அரசின் உத்தரவு உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக உள்ளது. இந்தத் திட்டம் பொதுமக்களுக்கு மட்டுமா..?, அல்லது அனைவருக்கும் பொருந்துமா..?. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜி.எஸ்.டி.யை குறைக்க கூறியபோது குறைக்காமல், தற்போது 5 மாநில தேர்தல் தோல்விக்கு பின்னர் குறைத்து 

உள்ளனர். ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தியபோது ஏன் இதனை செய்ய முடியாது என்று சொன்னார்கள்..?. 

பிரியங்கா சோப்ரா திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க முடிந்த பிரதமரால், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை ஏன் சந்திக்க நேரம் இல்லாமல் போனது. புயலால் பாதிக்கபட்ட விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லாத முதல் பிரதமர் இவர் தான். அ.தி.மு.க., பா.ஜ.க. உறவு கை மற்றும் கைக்கு போடும் கிளவ்ஸ் போன்றது. இருவருமே விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. பா.ஜ.க.,அ.தி.மு.க.வை வேறு வேறாக பார்க்கவில்லை. பா.ஜ.க. சொல்வதைத் தான் அ.தி.மு.க. செய்கிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...