நீலகிரி : கோத்தகிரி அருகே வீட்டிற்குள் புகுந்து 13 சவரன் நகையைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நீலகிரி : கோத்தகிரி அருகே வீட்டிற்குள் புகுந்து 13 சவரன் நகையைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோத்தகிரி காமராஜர் சதுக்கம் புனித லூக்கா ஆலயத்தில் பணியாற்றி வருபவர் வேதமுத்து. இவர், வழக்கம் போல் ஆலயத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது மனைவி வேதமுத்துவிற்கு துணிகளைக் கொண்டு கொடுத்துவிட்டு, திரும்பி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, பீரோவில் இருந்த துணிகள் கீழே சிதறி கிடந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், பீரோவை திறந்து பார்த்த போது, அதில் இருந்த நகைகள் திருடப்பட்டது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, வேதமுத்துவை அழைத்து தகவல் தெரிவிக்கப்பட்டு, நகை திருட்டு குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில், கோத்தகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். பின்னர், இத்திருட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கொள்ளையர்களை காமராஜர் சதுக்கம், பேருந்து நிலைய சி.சி.டி.வி. கேமரா மூலம் பதிவான காட்சிகளை வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோத்தகிரி காமராஜர் சதுக்கம் புனித லூக்கா ஆலயத்தில் பணியாற்றி வருபவர் வேதமுத்து. இவர், வழக்கம் போல் ஆலயத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது மனைவி வேதமுத்துவிற்கு துணிகளைக் கொண்டு கொடுத்துவிட்டு, திரும்பி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, பீரோவில் இருந்த துணிகள் கீழே சிதறி கிடந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், பீரோவை திறந்து பார்த்த போது, அதில் இருந்த நகைகள் திருடப்பட்டது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, வேதமுத்துவை அழைத்து தகவல் தெரிவிக்கப்பட்டு, நகை திருட்டு குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில், கோத்தகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். பின்னர், இத்திருட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கொள்ளையர்களை காமராஜர் சதுக்கம், பேருந்து நிலைய சி.சி.டி.வி. கேமரா மூலம் பதிவான காட்சிகளை வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.