முதுமலையில் புதிய உறவுகளுடன் இணைந்த விநாயகன் : வனத்துறையினர் மகிழ்ச்சி

நீலகரி : தடாகம் பகுதியில் இருந்து பிடித்துச் சென்று முதுமலையில் விடப்பட்ட காட்டு யானை விநாயகன், அங்கு யானைக் கூட்டங்களுடன் சகஜமாக சுற்றித் திரிவது வனத்துறையினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகரி : தடாகம் பகுதியில் இருந்து பிடித்துச் சென்று முதுமலையில் விடப்பட்ட காட்டு யானை விநாயகன், அங்கு யானைக் கூட்டங்களுடன் சகஜமாக சுற்றித் திரிவது வனத்துறையினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தடாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உலா வந்து கொண்டிருந்த காட்டு யானைகளில் ஒன்றான விநாயகனை வனத்துறையினர் கடும் போராட்டத்திற்குப் பிறகு சிறைபிடித்து முதுமலை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். பயிர்களை சேதப்படுத்தி வந்தாலும், மனிதர்களிடம் நட்புடனேயே பழகி வந்த விநாயகனின் பிரிவு தடாகம் மக்களை நீங்கா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இதனிடையே, புதிய வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்ட விநாயகனின் நடமாட்டத்தைக் கண்காணிக்க, அதன் கழுத்தில் ரேடியோ காலர் எனப்படும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது. 4 நாட்களாக முதுமலைப் பகுதியில் நடமாடி வரும் விநாயகனை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், சேண்ட் ரோடு அருகே விநாயகன் அங்குள்ள யானைக் கூட்டங்களுடன் சகஜமாக வலம் வருவது தெரிய வந்துள்ளது.



ஒரு யானை தனித்து விடப்படுவதும், கூட்டங்களுடன் சேர்ந்து கொள்வதும் அதன் மதநீரைப் பொறுத்துதான் இருக்கும். அந்த வகையில், தடாகத்தில் இருந்து பிடித்துச் செல்லப்பட்ட விநாயகன், அங்குள்ள யானைக் கூட்டங்களுடன் சேர்ந்திருப்பது வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே, விநாயகனின் சாணத்தை பரிசோதனை செய்ததில், அதன் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதும் வனத்துறையினரால் உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...