நீலகிரி : விவசாயத்திற்குப் பயன்படும் வகையில் மனித கழிவுகளில் இருந்து இயற்கை முறையில் உரம் தயாரிக்கும் ஒருநாள் கருத்தரங்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் உதகையில் நடைபெற்றது.
நீலகிரி : விவசாயத்திற்குப் பயன்படும் வகையில் மனித கழிவுகளில் இருந்து இயற்கை முறையில் உரம் தயாரிக்கும் ஒருநாள் கருத்தரங்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் உதகையில் நடைபெற்றது.
இந்தியா முழுவதும் திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், தனிநபர் கழிப்பிடம் கட்டுவதன் அவசியம் குறித்தும் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் பொதுமக்களிடையே தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாக நீலகிரி மாவட்டத்தில் தனிநபர் கழிப்பிடம் சுமார் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதையடுத்து, அதன் கழிவுகள் திறந்தவெளி மற்றும் ஓடைகள், ஆறுகளில் கலப்பதால் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு உதகையில் இயங்கி வரும் தனியார் தொண்டு நிறுவனம் மனித கழிவுகளை சேகரித்து, அதில் இருந்து விவசாய நிலத்திற்கு இயற்கை முறையில் உரம் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், விவசாயப் பயிர்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது.
மேலும், குடியிருப்புகளில் இருந்து வீணாக வெளியேறும் கழிவுநீரை சேகரித்து சுத்திகரிக்கப்பட்டு விவசாயத்திற்குப் பயன்பட்டு வருகிறது. ஒரு குடியிருப்புக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் லிட்டர் நீர் வீணாகி கொண்டிருந்த நிலையில், தற்போது கேத்தி பேருராட்சியில் சுமார் 400 வீடுகளில் இருந்து 400 மில்லியன் கழிவுநீர் சேகரிக்கப்பட்டு சுத்திகரித்து விவசாயத்திற்கு உபயோகிக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கருத்தரங்கை சிறப்பு மேம்பாட்டு திட்ட இயக்குநர் பாபு தொடங்கி வைத்தார். இதில், ஏராளமான விவசாயிகள், பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் ஊராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தியா முழுவதும் திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், தனிநபர் கழிப்பிடம் கட்டுவதன் அவசியம் குறித்தும் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் பொதுமக்களிடையே தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாக நீலகிரி மாவட்டத்தில் தனிநபர் கழிப்பிடம் சுமார் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதையடுத்து, அதன் கழிவுகள் திறந்தவெளி மற்றும் ஓடைகள், ஆறுகளில் கலப்பதால் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு உதகையில் இயங்கி வரும் தனியார் தொண்டு நிறுவனம் மனித கழிவுகளை சேகரித்து, அதில் இருந்து விவசாய நிலத்திற்கு இயற்கை முறையில் உரம் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், விவசாயப் பயிர்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது.
மேலும், குடியிருப்புகளில் இருந்து வீணாக வெளியேறும் கழிவுநீரை சேகரித்து சுத்திகரிக்கப்பட்டு விவசாயத்திற்குப் பயன்பட்டு வருகிறது. ஒரு குடியிருப்புக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் லிட்டர் நீர் வீணாகி கொண்டிருந்த நிலையில், தற்போது கேத்தி பேருராட்சியில் சுமார் 400 வீடுகளில் இருந்து 400 மில்லியன் கழிவுநீர் சேகரிக்கப்பட்டு சுத்திகரித்து விவசாயத்திற்கு உபயோகிக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கருத்தரங்கை சிறப்பு மேம்பாட்டு திட்ட இயக்குநர் பாபு தொடங்கி வைத்தார். இதில், ஏராளமான விவசாயிகள், பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் ஊராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.