ஜி.எஸ்.டி வரிவிதித்து பிரதமர் தவறிழைத்துவிட்டார் : கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் டி.ராஜா விமர்சனம்

கோவை : ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மூலம் தவறிழைத்துவிட்டதை மறந்து பிரதமர் மோடி 99 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டியை குறைக்க இருப்பதாகக் கூறிவருகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் விமர்சித்துள்ளார்.


கோவை : ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மூலம் தவறிழைத்துவிட்டதை மறந்து பிரதமர் மோடி 99 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டியை குறைக்க இருப்பதாகக் கூறிவருகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் விமர்சித்துள்ளார்.

கோவையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு தலைமையகமான ஜீவா இல்லத்தில் அதன் செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- மோடியின் தவறான பொருளாதார, அரசியல் கொள்கைகள் காரணமாக பெண்கள், குழந்தைகள், பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினர் என அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

 ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மூலம் தவறிழைத்துவிட்டதை மறந்து பிரதமர் மோடி 99 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டியை குறைக்க இருப்பதாகக் கூறுகிறார். இதற்கிடையே, தவறான ஜி.டி.பி எண்களைக் கூறி, மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறார். 

மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்கிற ஒரே கொள்கையின் அடிப்படையில் காங்கிரசை ஆதரிக்க நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஒன்றிணைந்துள்ளது. பாஜகவிற்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.

சி.பி.ஐ, ஆர்.பி.ஐ உள்ளிட்ட அரசின் அமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடிமக்களின் குடியுரிமை மற்றும் தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் உளவு பார்க்கும் உரிமையை 10 அமைப்புகளுக்கு வழங்கியிருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. அந்த முறையில் ஆழ்ந்த கவலையளிப்பதாக உள்ளது. 

மேலும், ராகுலை பிரதமராக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கருத்து திமுகவின் தனிப்பட்ட கருத்தாகும். யார் பிரதமர் என்பதை தேர்தல் முடிந்த பிறகு ஒருங்கிணைந்து செயல்படும் கட்சிகள் தான் முடிவு செய்யும். 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட வர முடியாத அளவிற்கு நடிகைகளின் திருமணங்களுக்கு பிரதமர் சென்று வருகிறார். இந்நிலையில், மத்திய அரசின் கொள்கைகளை விமர்சிக்காமல் எல்லா முடிவுகளையும் நிபந்தனையின்றி ஆதரிக்கும் கட்சியாக மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க அரசு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும், இந்த சந்திப்பில் அக்கட்சியின் தேசிய செயலாளர் பல்லவ் செங்குப்தா உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...