கோவை : கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஓட்டல் ரெசிடென்சியில் 40 அடி உயரமுள்ள கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கப்பட்டுள்ளது.
கோவை : கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஓட்டல் ரெசிடென்சியில் 40 அடி உயரமுள்ள கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், கோவையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக, ஓட்டல் ரெசிடென்சியில் 40 அடி உயரத்தில் கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை, சிறப்பு விருந்தினர் ஏர் கமாண்டர் எஸ்.ஆர். மேனன் விளக்கேற்றி அறிமுகப்படுத்தி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அழகிய பெண்கள் பிங்க் நிற ஆடையிலும், ஆண்கள் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான சூழலை ஏற்படுத்தினர். அதோடு, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கேக்குள், வொயின் உள்ளிட்ட பலப் பொருட்கள் வழங்கப்பட்டது.

"நமது முன்னோர்களின் கலாச்சாரத்தை விளக்கும் வகையில் அமைக்கப்படுவதே கிறிஸ்துமஸ் மரமாகும். தற்போது, ஓட்டல்கள், வணிக வளாகங்களில் இவை அமைக்கப்படுவது வழக்கமாகி விட்டது. இது நல்லதற்கான அடையாளமாகும்," இவ்வாறு கூறினார் ஓட்டல் ரெசிடென்சியில் ஆபரேசன் இயக்குநர் டி. சார்லஸ் ஃபெபியன்.
