விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க வலுக்கும் எதிர்ப்பு : நாளை முதல் 7 மாவட்டங்களில் விவசாயிகள் உண்ணாவிதப் போராட்டம்

திருப்பூர் : திருப்பூரில் விவசாய நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை முதல் 7 மாவட்டங்களில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

திருப்பூர் : திருப்பூரில் விவசாய நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை முதல் 7 மாவட்டங்களில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். 



மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விவசாய நிலங்கள் வழியே மின் கோபுரம் அமைத்துக் கொண்டு செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

இதனால், திருப்பூர், கோவை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. விவசாய நிலங்களில் கோபுரங்கள் அமைத்து மின்சாரம் கொண்டு செல்லாமல், நெடுஞ்சாலை ஓரங்களில் கேபிள் வழியாகக் கொண்டு செல்லக் கோரியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் விவசாய நிலங்களின் மீது கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 8 மாவட்டங்களில் விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கள்ளிபாளையத்தில் நடைபெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 6-வது நாளாக நடத்தப்பட்டு வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் வாயில் கருப்புத் துணி கட்டி பங்கேற்றுள்ளனர். மேலும், கழுதையிடம் மனு அளித்தும், மாதிரி மின் கோபுரத்தை பாடை கட்டி ஊர்வலமாகக் கொண்டு வந்தும் விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 



இதனிடையே, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விவசாயிகள் போராட்டம் குறித்து தெரிவித்த கருத்துக்கு உயர்மின் அழுத்த கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்க தலைவர் கொங்கு ராஜாமணி கடும் கண்டனம் தெரிவித்தார்.

மேலும், அவர் கூறியதாவது :- விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறார்கள். தங்களுக்கு இழப்பீடு உயர்த்தி தருவதாக மட்டுமே அமைச்சர் தெரிவித்திருக்கிறார். மாற்றுத் திட்டங்கள் குறித்து பேசாததாலேயே பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி நாளை முதல் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...