நீலகிரி : குன்னுார் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் 400 இளம் ராணுவ வீரர்கள் இன்று சத்தியபிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
நீலகிரி : குன்னுார் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் 400 இளம் ராணுவ வீரர்கள் இன்று சத்தியபிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாமில் தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி பெறும் வீரர்கள், இந்தியாவின் எல்லை பகுதிகளில் உள்ள முகாம்களுக்குப் பணிபுரிய அனுப்பி வைக்கப்படுவர். 46 வாரங்கள் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களில் 400 பேர் பயிற்சி முடித்து, ராணுவ வீரர்களாக பணிபுரிய சத்தியப்பிரமாணம் ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

பயிற்சிக்கு செல்லும் ராணுவ வீரர்கள், பகவத்கீதை, பைபிள், குரான் புத்தகங்கள் மற்றும் தேசிய கொடி மீது உப்பு உட்கொண்டு சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். ராணுவ பேண்ட் இசைக்கேற்றவாறு ராணுவ வீரர்கள் கம்பீர அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
பயிற்சி வீரர்களின் கம்பீரமான அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட ராணுவ மருத்துவனை பிரிகேடியர் பங்கஜ் பி ராவ் கமாண்டென்ட், சிறந்த 5 வீரர்களுக்குப் பதக்கங்களை வழங்கிக் கவுரவித்தார்.

தங்களது பிள்ளைகள் ராணுவ வீரர்களாக அணிவகுத்து வந்த காட்சியைக் கண்ட வீரர்களின் பெற்றோர், நாட்டின் பாதுகாப்புக்காக அனுப்புவதை எண்ணி பெருமிதம் அடைந்தனர். பயிற்சியை முடித்த 400 ராணுவ வீரர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பட்டாலியன்களுக்கு அனுப்பப்படுவர். இந்நிகழ்ச்சியில் உயர் ராணுவ அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள், ராணுவ வீரர்கள், பெற்றோர்கள், பயிற்சி ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாமில் தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி பெறும் வீரர்கள், இந்தியாவின் எல்லை பகுதிகளில் உள்ள முகாம்களுக்குப் பணிபுரிய அனுப்பி வைக்கப்படுவர். 46 வாரங்கள் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களில் 400 பேர் பயிற்சி முடித்து, ராணுவ வீரர்களாக பணிபுரிய சத்தியப்பிரமாணம் ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

பயிற்சிக்கு செல்லும் ராணுவ வீரர்கள், பகவத்கீதை, பைபிள், குரான் புத்தகங்கள் மற்றும் தேசிய கொடி மீது உப்பு உட்கொண்டு சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். ராணுவ பேண்ட் இசைக்கேற்றவாறு ராணுவ வீரர்கள் கம்பீர அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
பயிற்சி வீரர்களின் கம்பீரமான அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட ராணுவ மருத்துவனை பிரிகேடியர் பங்கஜ் பி ராவ் கமாண்டென்ட், சிறந்த 5 வீரர்களுக்குப் பதக்கங்களை வழங்கிக் கவுரவித்தார்.

தங்களது பிள்ளைகள் ராணுவ வீரர்களாக அணிவகுத்து வந்த காட்சியைக் கண்ட வீரர்களின் பெற்றோர், நாட்டின் பாதுகாப்புக்காக அனுப்புவதை எண்ணி பெருமிதம் அடைந்தனர். பயிற்சியை முடித்த 400 ராணுவ வீரர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பட்டாலியன்களுக்கு அனுப்பப்படுவர். இந்நிகழ்ச்சியில் உயர் ராணுவ அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள், ராணுவ வீரர்கள், பெற்றோர்கள், பயிற்சி ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.