ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மீண்டும் தடை : உயர் நீதிமன்றம் உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பல போராட்டங்கள் வெடித்த நிலையில், தேசிய பசுமை தீர்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவை பல தரப்பினரும் எதிர்த்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமா பாபு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்த அனுமதியை ரத்து செய்யக்கோரி முறையீடு செய்தார்.


ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பல போராட்டங்கள் வெடித்த நிலையில், தேசிய பசுமை தீர்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவை பல தரப்பினரும் எதிர்த்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமா பாபு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்த அனுமதியை ரத்து செய்யக்கோரி முறையீடு செய்தார். 

இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் ஆஜரான மூத்த வக்கீல் வைகை, பிற்பகலில் வெளியான உத்தரவு பற்றி, தீர்ப்பு வெளியாவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பே வேதாந்தா நிறுவனத்திற்கு உத்தரவு நகல் பதிவேற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்தார். 

இதுபோன்ற நடவடிக்கைகளால், நீதிமன்றம், தீர்ப்பாயங்கள் மீதுள்ள நம்பிக்கை கேள்விக்குறியாகும் என வாதிட்ட அவர், வழக்கை முறையாக விசாரித்து உரிய உத்தரவு வழங்க வேண்டும் என்றார், வக்கீல் வைகை. மேலும், அவர் இந்த தீர்ப்பின் மூலம் அடுத்த 2 மாதத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு வேதாந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

எனவே, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும். நீதிமன்றத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டார். அவருடைய வாதத்திற்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு மேல்முறையீடு செய்வதற்கு 90 நாள் அவகாசம் உள்ளது. 

ஆகையால், தமிழக அரசு இதுதொடர்பாக என்ன முடிவு எடுக்கிறது என்பதை பொறுத்து தான் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியும் என நீதிபதிகள் பதிலளித்தனர். இதனைத் தொடர்ந்து பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய மார்ச் 14 வரை அவகாசம் உள்ள நிலையில், அதுபற்றி முன்கூட்டியே அடுத்த மாதம் 21ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இது தொடர்பாக தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், அதுவரை ஸ்டெர்லைட் ஆலையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என தெரிவித்தனர். தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சாதகமான உத்தரவைப் பெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு இது எதிர்பாராத தீர்ப்பாக அமைந்ததுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...