திருப்பூர் : பல்லடம் அருகே ஓட்டுநரின் கவனக்குறைவால் பள்ளி மாணவன் மீது பள்ளிவேன் ஏறிய விபத்தில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் : பல்லடம் அருகே ஓட்டுநரின் கவனக்குறைவால் பள்ளி மாணவன் மீது பள்ளிவேன் ஏறிய விபத்தில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர், பல்லடம் அருகே அக்ராணம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பரமசிவம்(36). இவரது மகன் சஞ்சீவ்குமார்(10) பல்லடம் பொள்ளாச்சி சாலையிலுள்ள பாரதி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் இன்று மாலை பள்ளி முடிந்து வழக்கம் போல் சக மாணவர்கள் சிலருடன் பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பியுள்ளான்.
இதையடுத்து, பள்ளிப் பேருந்து அக்ராணம் பகுதியில் நின்று மாணவர்களை இறக்கிவிட்ட போது, பேருந்திலிருந்து மாணவன் சஞ்சீவ்குமார் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கவனிக்காத ஓட்டுநர் பேருந்தை நகர்த்தியுள்ளார். அப்போது மாணவன் மீது பேருந்து ஏறியதில் சிறுவன் சஞ்சீவ்குமார் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து பெற்றோர் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் பல்லடம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, விரைந்து சென்ற காவல்துறை, சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இந்த விபத்து தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய தனியார் பள்ளி வேன் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர், பல்லடம் அருகே அக்ராணம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பரமசிவம்(36). இவரது மகன் சஞ்சீவ்குமார்(10) பல்லடம் பொள்ளாச்சி சாலையிலுள்ள பாரதி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் இன்று மாலை பள்ளி முடிந்து வழக்கம் போல் சக மாணவர்கள் சிலருடன் பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பியுள்ளான்.
இதையடுத்து, பள்ளிப் பேருந்து அக்ராணம் பகுதியில் நின்று மாணவர்களை இறக்கிவிட்ட போது, பேருந்திலிருந்து மாணவன் சஞ்சீவ்குமார் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கவனிக்காத ஓட்டுநர் பேருந்தை நகர்த்தியுள்ளார். அப்போது மாணவன் மீது பேருந்து ஏறியதில் சிறுவன் சஞ்சீவ்குமார் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து பெற்றோர் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் பல்லடம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, விரைந்து சென்ற காவல்துறை, சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இந்த விபத்து தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய தனியார் பள்ளி வேன் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.