கோவை : ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர் ரகு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி விவகார விசாரணையில் ஆஜராகாததால், மகாலிங்கபுரம் காவல்நிலையத்திற்கு அவரைக் கைது செய்து நேரில் ஆஜர்படுத்தும்படி ஆணை அனுப்பப்பட்டுள்ளது.
கோவை : ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர் ரகு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி விவகார விசாரணையில் ஆஜராகாததால், மகாலிங்கபுரம் காவல்நிலையத்திற்கு அவரைக் கைது செய்து நேரில் ஆஜர்படுத்தும்படி ஆணை அனுப்பப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்திலுள்ள வால்பாறையில் இயங்கி வருகிறது ஸ்ரீராம் எஸ்டேட் நிறுவனம். இது கடந்த 2013 -ம் ஆண்டு முதல் 2016 -ம் ஆண்டு வரையிலான கால கட்டத்திற்குட்பட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் அதனுடன் இணைந்த நிதிகளைச் செலுத்தவில்லை.
எனவே, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன சட்டம் 1952 பிரிவு 7 ஏ(1பி) -ன் கீழ் அந்த நிறுவனத்தின் மீது விசாரணை ஆரம்பிக்கப்பட்டு கடந்த இரண்டரை வருடங்களாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதுவரை 35 முறை வாய்தாக்கள் அளிக்கப்பட்டு உள்ளன.
இதற்கிடையே, அந்த நிறுவனத்தின் பொறுப்பாளரான ரகு என்பவர் இரண்டு முறை மட்டுமே விசாரணைக்கு ஆஜராகியிருந்தார். மேலும், இறுதியாக அனுப்பப்பட்ட சம்மனுக்கு ஆஜராகி வருகை பதிவேடு சம்பளம் இன்னபிற ஆவணங்களைச் சமர்ப்பிப்பதாக உறுதியளித்தார்.
ஆனால், இரண்டு மாத கால அவகாசம் அளித்தும் எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை. இந்த விசாரணையானது தொழிலாளர்களின் நலன் கருதி மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் எந்த ஒத்துழைப்புகளும் அளிக்காததால் விசாரணை அதிகாரி, ரகுவிற்கு பிடிவாரண்ட் கொடுத்து உள்ளார்.
இதன்படி, நான்கு வார காலத்திற்குள் ரகுவை கைது செய்து நேரில் ஆஜர்படுத்துமாறு மகாலிங்கபுரம் காவல்நிலையத்திற்கு ஆணை அனுப்பப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்திலுள்ள வால்பாறையில் இயங்கி வருகிறது ஸ்ரீராம் எஸ்டேட் நிறுவனம். இது கடந்த 2013 -ம் ஆண்டு முதல் 2016 -ம் ஆண்டு வரையிலான கால கட்டத்திற்குட்பட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் அதனுடன் இணைந்த நிதிகளைச் செலுத்தவில்லை.
எனவே, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன சட்டம் 1952 பிரிவு 7 ஏ(1பி) -ன் கீழ் அந்த நிறுவனத்தின் மீது விசாரணை ஆரம்பிக்கப்பட்டு கடந்த இரண்டரை வருடங்களாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதுவரை 35 முறை வாய்தாக்கள் அளிக்கப்பட்டு உள்ளன.
இதற்கிடையே, அந்த நிறுவனத்தின் பொறுப்பாளரான ரகு என்பவர் இரண்டு முறை மட்டுமே விசாரணைக்கு ஆஜராகியிருந்தார். மேலும், இறுதியாக அனுப்பப்பட்ட சம்மனுக்கு ஆஜராகி வருகை பதிவேடு சம்பளம் இன்னபிற ஆவணங்களைச் சமர்ப்பிப்பதாக உறுதியளித்தார்.
ஆனால், இரண்டு மாத கால அவகாசம் அளித்தும் எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை. இந்த விசாரணையானது தொழிலாளர்களின் நலன் கருதி மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் எந்த ஒத்துழைப்புகளும் அளிக்காததால் விசாரணை அதிகாரி, ரகுவிற்கு பிடிவாரண்ட் கொடுத்து உள்ளார்.
இதன்படி, நான்கு வார காலத்திற்குள் ரகுவை கைது செய்து நேரில் ஆஜர்படுத்துமாறு மகாலிங்கபுரம் காவல்நிலையத்திற்கு ஆணை அனுப்பப்பட்டுள்ளது.