கோவையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் குளத்தில் தவறி விழுந்து பலி

கோவை : வாலாங்குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் குளத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கிப் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை : வாலாங்குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் குளத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கிப் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், சுங்கம் பைபாஸ் சாலையைச் சேர்ந்தவர் சார்லஸ் (37). இவர் அருகேயுள்ள வாலாங்குளத்தில் வெள்ளிக்கிழமை நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, குளத்திற்குள் இறங்கி ஆழமான பகுதிக்குச் சென்று மீன் பிடிக்க முயன்றுள்ளார். 

இதற்கிடையில், எதிர்பாராத விதமாக சகதியில் சிக்கி தண்ணீரில் மூழ்கியுள்ளார். நீச்சல் தெரியாததால் உதவிக்கு சார்லஸ் கூக்குரலிட்டு கத்தியுள்ளார். அவருடைய சத்தம் கேட்டு, அருகில் இருந்த மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 



இதையடுத்து, மண்டல தலைமை தீயணைப்பு நிலைய அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பின்பு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சார்லஸின் உடலை மீட்டனர். அதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...