நீலகிரி தனிமாவட்டமாக பிரிந்து 150-வது ஆண்டுகள் நிறைவு : மலைமாவட்ட மக்களின் பாரம்பரியத்தை விளக்கும் சாக்லெட் கண்காட்சி

நீலகிரி : நீலகிரி தனிமாவட்டமாக பிரிந்து 150 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பழங்குடியின மக்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை விளக்கும் வகையிலான சாக்லெட் கண்காட்சி இன்று தொடங்கியது.

நீலகிரி : நீலகிரி தனிமாவட்டமாக பிரிந்து 150 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பழங்குடியின மக்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை விளக்கும் வகையிலான சாக்லெட் கண்காட்சி இன்று தொடங்கியது.



மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் கண்டுபிடிக்கப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் தனிமாவட்டமாக பிரிந்து 150 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனைக் கொண்டாடும் வகையில், 10-ம் ஆண்டு வருடாந்திர சாக்லெட் திருவிழா உதகையில் இயங்கி வரும் தனியார் சாக்லெட் அருங்காட்சியகத்தில் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் 2-ம் தேதி வரை இந்த சாக்லெட் திருவிழா நடக்கிறது. 



நீலகிரி மாவட்டத்தின் பெருமைகளை பறைசாட்டும் நோக்கில் மாவட்டத்தில் வாழ்ந்து வரும் தோடர், பணியர், இருளர், குறும்பர் போன்ற பழங்குடியின மக்களின் கலாச்சாரம், வாழ்க்கையை முறையைப் பிரதிபலிக்கும் வகையில், அவர்களின் வழிப்பாட்டு தளங்கள், வீடுகள் ஆகியவை சாக்லெட்டினால் வடிவமைக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.



மேலும், உதகையில் உள்ள பழமை வாய்ந்த கட்டிடமான கல்வீடு சாக்லெட்டினால் வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நீலகிரிக்குப் பெருமை சேர்க்கும் தேயிலைத்தூள் கொண்டு கிரின் டீ சாக்லெட், மசாலா டீ சாக்லெட், பிளாக் டீ சாக்லெட் போன்ற புதுவிதமான சாக்லெட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளது. 

நீலகிரியில் உற்பத்தியாகும் இயற்கை மூலிகைகள் கொண்டும், வாசனைப் பொருட்கள் கொண்டு தைம் சாக்லெட், ரோஸ்மேரி சாக்லெட், கீரை சாக்லெட், மிளகு மற்றும் ஜாஹிக்காய் சாக்லெட் போன்றவை புதுமையாக உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், மலை காய்கறி வகைகளான கேரட், பீட்ரூட், கீரை போன்ற வகைகளைக் கொண்டும் சாக்லெட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சாக்லெட் திருவிழாவிற்கு வருகை தரும் அனைவருக்கும், சாக்லெட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், டார்க் சாக்லெட்டின் பயன்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...