வளர்ச்சித் திட்டங்களுக்காக இடர்பாடுகளை பொறுத்துக் கொள்ள வேண்டும் : அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

திருப்பூர் : நாட்டின் வளர்ச்சிக்காகக் கொண்டு வரப்படும் திட்டங்களினால் ஏற்படும் இடர்பாடுகளை பொறுத்துக்கொள்ள வேண்டும் எனவும், விவசாயிகள் கோரிக்கை எதுவானாலும் அரசிடம் பேசி நல்ல முடிவினை எடுக்க வேண்டும் என திருப்பூரில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : நாட்டின் வளர்ச்சிக்காகக் கொண்டு வரப்படும் திட்டங்களினால் ஏற்படும் இடர்பாடுகளை பொறுத்துக்கொள்ள வேண்டும் எனவும், விவசாயிகள் கோரிக்கை எதுவானாலும் அரசிடம் பேசி நல்ல முடிவினை எடுக்க வேண்டும் என திருப்பூரில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான மாற்றுப் பொருட்களின் கண்காட்சி மற்றும் குப்பை மேலாண்மை கண்காட்சி தொடங்கப்பட்டது. 3 நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியினை மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை. கே. ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து பார்வையிட்டார். 



பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- விவசாய நிலங்கள் வழியே மின்கோபுரம் கொண்டு செல்வதால் பாதிக்கப்படும் விவசாயிகளை ஏற்கனவே முதலமைச்சரிடம் அழைத்து சென்று பேச வைத்துள்ளோம். அப்போது, உரிய இழப்பீடு தருவதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். 



சில வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படும் போது இடர்பாடுகள் வருவது இயல்பு. மின்சாரத்துறை அமைச்சர் மீண்டுமொருமுறை விவசாயிகளை சந்தித்து குறைகளைக் கேட்கவும் தயாராக இருக்கிறார். அவர்களுக்கான வசதிகளையும் மேம்படுத்தித் தர தயாராக இருக்கிறோம். 



மேலும், ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ள நிலையில், அவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக திருப்பூரை கொண்டுவர அணைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இவ்வாறு அவர் கூறினார். 



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...