ரூ.20 ஆயிரம் கோடி செலவில் வளர்ச்சி திட்டப் பணிகள் : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெருமிதம்

சென்னை : கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை நிறைவேற்ற அ.தி.மு.க அரசு சுமார் ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உரையாற்றினார்.

சென்னை : கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை நிறைவேற்ற அ.தி.மு.க அரசு சுமார் ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உரையாற்றினார். 

நகராட்சி நிர்வாக ஆணையரகம், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் தமிழ்நாடு நகர்ப்புற முதலீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான செயல்திறன் சார்ந்த ஆளுமை மேம்பாட்டை மேலும், பண்படுத்துவதற்காக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் ஓட்டலில் இன்று பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. அதனை செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், "தமிழ்நாட்டில் குடிநீர் வழங்கல் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டில் கீழ் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகள் ஆகியன உள்ளன. முந்தைய முதலமைச்சர் அம்மாவின் ஆட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் திட்டப் பணிகள், சாலை வசதிகள், மழைநீர் வடிகால், தெரு விளக்கு பராமரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, பாலங்கள் போன்ற அடிப்படை வசதிகளுக்காக ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. 

அவர்களின் வழியில் செயல்படும் எடப்பாடி தலைமையிலான அரசு மக்கள் நலத் திட்டப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு நல்லாட்சி புரிந்து வருகிறது. இந்த ஆட்சியில் 2 ஆண்டு காலத்தில் ரூ.20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும், அதிமுக அரசின் கொள்கைக்கு ஏற்ப, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், பல்வேறு குடிநீர் விநியோக திட்டங்கள் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன," என்றார்.

இந்த கருத்தரங்கில், குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், நிதி சேவை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் காகர்லா உஷா உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...