நீலகிரி : மஞ்சூர், கெத்தை வனப்பகுதிகளில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து காவல்துறை சார்பில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி : மஞ்சூர், கெத்தை வனப்பகுதிகளில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து காவல்துறை சார்பில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக - கேரளா எல்லையையொட்டி கெத்தை வனப்பகுதி அமைந்துள்ளது. கெத்தை வனத்தில் தேக்கு, சந்தனம் உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள், மூலிகை செடிகள் அதிகளவில் உள்ளது. இப்பகுதியில் மாவோயிஸ்டுகள் சுற்றித் திரிய வாய்ப்புள்ளதாகத் தகவல் வந்ததையடுத்து, வனத்துறை மற்றும் சிறப்பு அதிரடிப்படை காவல்துறை இணைந்து கண்காணிப்பு பணியைப் பலப்படுத்தி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மின்நிலையம், மின்வாரிய குடியிருப்பு, வனப்பகுதிக்கு போதிய பாதுகாப்பு அளித்துள்ளனர். மேலும், அவ்வழியாக வரும் வாகனங்களைச் சோதனை செய்வதுடன், அடையாளம் தெரியாத நபர்கள் குறித்தும் கண்காணித்து வருகின்றனர். அந்த பகுதியில் புதிய நபர்கள் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த பாதுகாப்பு பணியின் மற்றொரு பகுதியாக, தமிழக கேரள எல்லையில் உள்ள மஞ்சூர் காவல் நிலையத்தை சுற்றிலும் நூற்றுக்கணக்கான மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு புதிய நபர்கள் நடமாட்டம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாகக் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக - கேரளா எல்லையையொட்டி கெத்தை வனப்பகுதி அமைந்துள்ளது. கெத்தை வனத்தில் தேக்கு, சந்தனம் உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள், மூலிகை செடிகள் அதிகளவில் உள்ளது. இப்பகுதியில் மாவோயிஸ்டுகள் சுற்றித் திரிய வாய்ப்புள்ளதாகத் தகவல் வந்ததையடுத்து, வனத்துறை மற்றும் சிறப்பு அதிரடிப்படை காவல்துறை இணைந்து கண்காணிப்பு பணியைப் பலப்படுத்தி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மின்நிலையம், மின்வாரிய குடியிருப்பு, வனப்பகுதிக்கு போதிய பாதுகாப்பு அளித்துள்ளனர். மேலும், அவ்வழியாக வரும் வாகனங்களைச் சோதனை செய்வதுடன், அடையாளம் தெரியாத நபர்கள் குறித்தும் கண்காணித்து வருகின்றனர். அந்த பகுதியில் புதிய நபர்கள் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த பாதுகாப்பு பணியின் மற்றொரு பகுதியாக, தமிழக கேரள எல்லையில் உள்ள மஞ்சூர் காவல் நிலையத்தை சுற்றிலும் நூற்றுக்கணக்கான மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு புதிய நபர்கள் நடமாட்டம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாகக் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
