கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடிப்படை வசதிகளை உள்ளடக்கிய 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டனர்.
கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடிப்படை வசதிகளை உள்ளடக்கிய 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த சங்கத்தினர் மாநிலம் தழுவிய கோரிக்கை முழக்கப் போராட்டங்களை கடந்த 20 நாட்களாக நடத்தி வரும் நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மாவட்ட ஆட்சியரின் அலுவலக வாயில் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதோடு, 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திக் கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கூறுகையில், "கிராம நிர்வாக அலுவலர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக சொந்த செலவில் தான் இணையதள பயன்பாட்டினை கவனித்துக் கொள்கிறோம். இதன் செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலகத்தில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாததால் பெரும் அவதிக்கு ஆளாகி வருகிறோம். குறிப்பாகப் பெண்கள் இயற்கை உபாதைகள் கழிக்க கூட இடமில்லை. இந்த சிக்கல்களை சரிசெய்ய வேண்டும். மேலும், பட்டா மாறுதல் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்," என்றார்.

இதற்கிடையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் 130 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த சங்கத்தினர் மாநிலம் தழுவிய கோரிக்கை முழக்கப் போராட்டங்களை கடந்த 20 நாட்களாக நடத்தி வரும் நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மாவட்ட ஆட்சியரின் அலுவலக வாயில் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதோடு, 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திக் கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கூறுகையில், "கிராம நிர்வாக அலுவலர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக சொந்த செலவில் தான் இணையதள பயன்பாட்டினை கவனித்துக் கொள்கிறோம். இதன் செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலகத்தில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாததால் பெரும் அவதிக்கு ஆளாகி வருகிறோம். குறிப்பாகப் பெண்கள் இயற்கை உபாதைகள் கழிக்க கூட இடமில்லை. இந்த சிக்கல்களை சரிசெய்ய வேண்டும். மேலும், பட்டா மாறுதல் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்," என்றார்.

இதற்கிடையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் 130 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.