கோவை : கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை கைதி நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை : கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை கைதி நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கண்ணையனின் மகன் செந்தில்குமார் (39). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 2011 -ம் ஆண்டு முதல் சிறைவாசத்தில் இருந்த செந்தில் குமாருக்கு கடந்த சில மாதங்களாக அடிக்கடி உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று காலை திடீரென செந்திகுமார் கை, கால்கள் செயலிழந்து காணப்பட்டார். இதையடுத்து, சிறை நிர்வாகத்தினர் செந்தில் குமாரை கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கண்ணையனின் மகன் செந்தில்குமார் (39). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 2011 -ம் ஆண்டு முதல் சிறைவாசத்தில் இருந்த செந்தில் குமாருக்கு கடந்த சில மாதங்களாக அடிக்கடி உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று காலை திடீரென செந்திகுமார் கை, கால்கள் செயலிழந்து காணப்பட்டார். இதையடுத்து, சிறை நிர்வாகத்தினர் செந்தில் குமாரை கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.