கோவை : அலுவலக உதவியாளர்கள், தோட்டக்காரர் உள்ளிட்ட கோவை நீதிமன்றத்தில் உள்ள 49 காலிபணியிடங்களுக்கு வெளிப்படையான நேர்முக தேர்வு நடக்கும் என மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் தெரிவித்துள்ளார்.
கோவை : அலுவலக உதவியாளர்கள், தோட்டக்காரர் உள்ளிட்ட கோவை நீதிமன்றத்தில் உள்ள 49 காலிபணியிடங்களுக்கு வெளிப்படையான நேர்முக தேர்வு நடக்கும் என மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் தெரிவித்துள்ளார்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- காலியாக உள்ள 33 அலுவலக உதவியாளர்கள் மற்றும் 16 தோட்டக்காரர், துப்புரவு தொழிலாளி, இரவுக்காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு 9,827 பேருக்கும், பிற பணிகளுக்கு 1,706 பேருக்கும் வருகிற 22,23 தேதிகளில் கோவையில் நடைபெறும் நேர்முக தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு வெளிப்படையான நேர்முக தேர்வு நடைபெறும். வேலைக்காக யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். நேர்முக தேர்வுகள் வீடியோ பதிவு செய்யப்படும். 24-ம் தேதி இரவு தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்படும். யாரேனும் வேலை வாங்கித் தருவதாக பணம் கேட்டால் தன்னிடம் நேரடியாக புகார் அளிக்கலாம். முறைகேடுகளில் ஈடுபடும் விண்ணப்பதாரர்கள் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை நீதிமன்றத்தில் வருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளின் விசாரணை தகவல்களை தெரிந்து கொள்ள இ-கோர்ட் திட்டம் மூலம் ஒருங்கிணைந்த பதிவெண் வழங்கும் முறை செயல்படுத்தப்படும், இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேலின் இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூடுதல் முதன்மை நீதிபதி குணசேகரன் உடனிருந்தார்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- காலியாக உள்ள 33 அலுவலக உதவியாளர்கள் மற்றும் 16 தோட்டக்காரர், துப்புரவு தொழிலாளி, இரவுக்காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு 9,827 பேருக்கும், பிற பணிகளுக்கு 1,706 பேருக்கும் வருகிற 22,23 தேதிகளில் கோவையில் நடைபெறும் நேர்முக தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு வெளிப்படையான நேர்முக தேர்வு நடைபெறும். வேலைக்காக யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். நேர்முக தேர்வுகள் வீடியோ பதிவு செய்யப்படும். 24-ம் தேதி இரவு தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்படும். யாரேனும் வேலை வாங்கித் தருவதாக பணம் கேட்டால் தன்னிடம் நேரடியாக புகார் அளிக்கலாம். முறைகேடுகளில் ஈடுபடும் விண்ணப்பதாரர்கள் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை நீதிமன்றத்தில் வருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளின் விசாரணை தகவல்களை தெரிந்து கொள்ள இ-கோர்ட் திட்டம் மூலம் ஒருங்கிணைந்த பதிவெண் வழங்கும் முறை செயல்படுத்தப்படும், இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேலின் இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூடுதல் முதன்மை நீதிபதி குணசேகரன் உடனிருந்தார்.