கோட நாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கின் 3 -வது கைதி உதகை நீதிமன்றத்தில் ஆஜர்

நீலகிரி : கோட நாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பித்த 3 -வது குற்றவாளியை உதகை மாவட்ட அமர்வு நீதி மன்றம் மற்றும் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் கேரள காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

நீலகிரி : கோட நாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பித்த 3 -வது குற்றவாளியை உதகை மாவட்ட அமர்வு நீதி மன்றம் மற்றும் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் கேரள காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். 



மறைந்தமுன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் காவலாளியின் கொலை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கொலை வழக்கில் 3-வது குற்றவாளியான தீபு, கடந்த முறை நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி வடமலை உத்தரவிட்டிருந்தார். 



இதையடுத்து, கேரளா மாநிலம் கண்ணணூரில் இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு தலைச்சேரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த தீபுவை இன்று கேரளா மாநில போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை பிடிவாரண்டை ரத்து செய்து வரும் ஜனவரி மாதம் 10 -ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். 

இந்த விசாரணைக்கு பின் கைதி தீபுவை, கேரள போலீஸார் அம்மாநில சிறைக்கு அழைத்து சென்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...