கோவை : திருச்சியில் கருஞ்சட்டை பேரணி நடத்த உயர்நீதிமன்றம் அனுமதியளித்திருப்பது, நியாயத்திற்கும், நீதிக்கும் கிடைத்த வெற்றி என த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.
கோவை : திருச்சியில் கருஞ்சட்டை பேரணி நடத்த உயர்நீதிமன்றம் அனுமதியளித்திருப்பது, நியாயத்திற்கும், நீதிக்கும் கிடைத்த வெற்றி என த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.
காந்திபுரத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வருகின்ற 23-ம் தேதி பல்வேறு அமைப்புகள் இணைந்து திருச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் கருஞ்சட்டை பேரணி நடைபெறுகிறது. இதற்கு காவல்துறை விதித்த தடையை நீக்கி மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி அளித்திருப்பது, நியாயத்திற்கும், நீதிக்கும் கிடைத்த வெற்றி.
பெரியார் கொள்கைகளை நிலைநிறுத்த இந்தப் பேரணியை நடத்த உள்ளோம். மதவெறி, சாதிவெறிக்கு எதிராக பெரியார் கருத்துகளை மக்களிடம் எடுத்து செல்வதே இப்பேரணியின் நோக்கமாகும். அண்ணா பெயரில் ஆட்சி செய்யும் அ.தி.மு.க. அரசு பெரியார் பேரணிக்கு அனுமதி மறுத்து, ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களுக்கு அனுமதி அளிக்கிறது. இது அண்ணாவிற்கு அ.தி.மு.க. செய்யும் துரோகம்.
கருஞ்சட்டைப் பேரணி 2 மணிக்கு தொடங்கும். மாலை திருச்சி உழவர் சந்தையில் மாநாடு நடைபெற உள்ளது. 100-க்கும் மேற்பட்ட பெரியார் இயக்க கொள்கை அமைப்புகள், தலித் அமைப்புகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டிற்கு திராவிட இயக்க மூத்தத் தலைவர் கி.வீரமணி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர், இவ்வாறு கூறினார்.
காந்திபுரத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வருகின்ற 23-ம் தேதி பல்வேறு அமைப்புகள் இணைந்து திருச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் கருஞ்சட்டை பேரணி நடைபெறுகிறது. இதற்கு காவல்துறை விதித்த தடையை நீக்கி மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி அளித்திருப்பது, நியாயத்திற்கும், நீதிக்கும் கிடைத்த வெற்றி.
பெரியார் கொள்கைகளை நிலைநிறுத்த இந்தப் பேரணியை நடத்த உள்ளோம். மதவெறி, சாதிவெறிக்கு எதிராக பெரியார் கருத்துகளை மக்களிடம் எடுத்து செல்வதே இப்பேரணியின் நோக்கமாகும். அண்ணா பெயரில் ஆட்சி செய்யும் அ.தி.மு.க. அரசு பெரியார் பேரணிக்கு அனுமதி மறுத்து, ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களுக்கு அனுமதி அளிக்கிறது. இது அண்ணாவிற்கு அ.தி.மு.க. செய்யும் துரோகம்.
கருஞ்சட்டைப் பேரணி 2 மணிக்கு தொடங்கும். மாலை திருச்சி உழவர் சந்தையில் மாநாடு நடைபெற உள்ளது. 100-க்கும் மேற்பட்ட பெரியார் இயக்க கொள்கை அமைப்புகள், தலித் அமைப்புகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டிற்கு திராவிட இயக்க மூத்தத் தலைவர் கி.வீரமணி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர், இவ்வாறு கூறினார்.