நீலகிரி : உதகையில் செயல்பட்டு வரும் உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூடும் மத்திய அரசின் திட்டத்தை கைவிடக் கோரி பட்டாளி மக்கள் கட்சி மாநில தலைவர் ஜி.கே. மணி தலைமையில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
நீலகிரி : உதகையில் செயல்பட்டு வரும் உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூடும் மத்திய அரசின் திட்டத்தை கைவிடக் கோரி பட்டாளி மக்கள் கட்சி மாநில தலைவர் ஜி.கே. மணி தலைமையில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு குறித்து ஆராய்ச்சி செய்யவும், நோய் தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காக கடந்த 1957-ம் ஆண்டு உதகையை அடுத்த முத்தோரை பாலாடா பகுதியில் உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தை அப்போதைய மத்திய அரசு தொடங்கியது.

இந்த ஆராய்ச்சி நிலையம் நூல் புழு மற்றும் இலை கருகல் நோய்கள் தாக்காத உருளைக்கிழங்கு விதையைக் கண்டுபிடித்தது. மேலும், திசுவளர்ப்பு, மகரந்த சேர்க்கை போன்ற முறைகள் மூலமாக குப்ரிகிரி தாரி, குப்ரி சூர்யா உள்பட பல வகையான உருளைக்கிழங்கு ரகங்களையும் கண்டுபிடித்து, அவற்றின் விதைகளை விவசாயிகளுக்கு குறைந்த விலைக்கு அளித்து வருகிறது. 3 ஆராய்ச்சியாளர்கள், 3 தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்பட 12 நிரந்தர பணியாளர்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக வணிகர்களைக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த ஆராய்ச்சி நிலையத்தை, தற்போது மத்திய அரசு மூட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கான பரிந்துரையை மத்திய வேளாண் ஆராய்ச்சி மையம், மத்திய வேளாண்துறைக்கு அனுப்பியுள்ளது. இதனால், இந்த நிலையம் விரைவில் மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நீலகிரி மாவட்ட உருளைக்கிழங்கு விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தென்னிந்தியாவிலேயே உதகையில் உள்ள ஒரே ஒரு உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூடும் திட்டத்தை கைவிடக் கோரியும், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று உதகை ஏ.டி.சி. திடல் முன்பு பட்டாளி மக்கள் கட்சி மாநில தலைவர் ஜி.கே மணி தலைமையில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு குறித்து ஆராய்ச்சி செய்யவும், நோய் தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காக கடந்த 1957-ம் ஆண்டு உதகையை அடுத்த முத்தோரை பாலாடா பகுதியில் உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தை அப்போதைய மத்திய அரசு தொடங்கியது.

இந்த ஆராய்ச்சி நிலையம் நூல் புழு மற்றும் இலை கருகல் நோய்கள் தாக்காத உருளைக்கிழங்கு விதையைக் கண்டுபிடித்தது. மேலும், திசுவளர்ப்பு, மகரந்த சேர்க்கை போன்ற முறைகள் மூலமாக குப்ரிகிரி தாரி, குப்ரி சூர்யா உள்பட பல வகையான உருளைக்கிழங்கு ரகங்களையும் கண்டுபிடித்து, அவற்றின் விதைகளை விவசாயிகளுக்கு குறைந்த விலைக்கு அளித்து வருகிறது. 3 ஆராய்ச்சியாளர்கள், 3 தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்பட 12 நிரந்தர பணியாளர்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக வணிகர்களைக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த ஆராய்ச்சி நிலையத்தை, தற்போது மத்திய அரசு மூட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கான பரிந்துரையை மத்திய வேளாண் ஆராய்ச்சி மையம், மத்திய வேளாண்துறைக்கு அனுப்பியுள்ளது. இதனால், இந்த நிலையம் விரைவில் மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நீலகிரி மாவட்ட உருளைக்கிழங்கு விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தென்னிந்தியாவிலேயே உதகையில் உள்ள ஒரே ஒரு உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூடும் திட்டத்தை கைவிடக் கோரியும், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று உதகை ஏ.டி.சி. திடல் முன்பு பட்டாளி மக்கள் கட்சி மாநில தலைவர் ஜி.கே மணி தலைமையில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.