மதுரையில் இம்மாத இறுதியில் அனைத்துலக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர்கள் மாநாடு

திருப்பூர் : 3 நாட்கள் நடக்கும் அனைத்துலக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர்கள் மாநாடு, மதுரையில் இந்த மாத இறுதியில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் : 3 நாட்கள் நடக்கும் அனைத்துலக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர்கள் மாநாடு, மதுரையில் இந்த மாத இறுதியில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த மாநாடு தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம், தமிழ் வர்த்தக சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளின் ஆதரவுடன் டிசம்பர் 28 -ம் தேதி தொடங்கவிருக்கிறது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்விற்கு பின்னலாடை தொழில்துறையினருக்கு அழைப்பு விடுக்க அந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பு குழுவினர் இன்று திருப்பூருக்கு வருகை புரிந்தனர். 

இது குறித்து செய்தியாளர்களிடம் ஒருங்கிணைப்பு குழுவினர் பேசுகையில், "தொழில்முனைவோர் மற்றும் திறனாளர்கள் மாநாட்டின் முக்கிய நோக்கமே வேலை தேடுவதை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகம், பலருக்கு வேலை தரும் தொழில்முனைதல் சமூகமாக மாறும் விருப்பத்தினை இம்மாநாட்டின் மூலமாக அறிவிக்க உள்ளோம்.

மேலும், இது பெண் தொழில் முனைவோருக்கான சிறப்பமர்வு, பொறியியல் கல்லூரிகள் சந்திக்கும் சவால்கள், சில்லறை வணிகத்தில் சவால்களை எதிர்கொள்வதற்கான வழிகள் ஆகியவை இடம்பெற்ற மாநாடாக இருக்கும். இம்மாநாட்டில் உலக புகழ்பெற்ற மலேசிய தொழிலதிபர் டத்தோ பழனியப்பன், துபாய் நாட்டைச் சேர்ந்த டெக்கான் லட்சுமணன், துபாய் ஆல்பர்ட் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்," என்றார். 

 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...