கோவை : கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை இணைந்து மேற்கொள்வதற்காக கோவை அமிர்தா பல்கலைக்கழகம், இந்திய கடற்படை இடையே நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
கோவை : கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை இணைந்து மேற்கொள்வதற்காக கோவை அமிர்தா பல்கலைக்கழகம், இந்திய கடற்படை இடையே நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சி கோவை, எட்டிமடையில் உள்ள அமிர்தா விஷ்வ வித்யா பீடம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. தென் மண்டல கடற்படையின் தலைமை கமாண்டர் அனில்குமார் சாவ்லாவும், பல்கலைக்கழக துணைவேந்தர் பி.வெங்கட்ரங்கன் ஆகியோரும் இதற்கான உடன்படிக்கையை பரிமாறிக் கொண்டனர்.

இது குறித்து கமாண்டர் அணில்குமார் சாவ்லா கூறும் போது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை எங்களால் பயன்படுத்த முடியும். தொழில்நுட்ப அடிப்படையில் இணைந்து செயல்பட இது ஒரு நல்ல வாய்ப்பு.
மேலும், கடற்படை வீரர்களை மேம்படுத்தும் வகையில் சிறந்த கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும்போது, உயர்தரமான கல்வி அறிவைப் பெற முடியும் இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பி.எஸ்.ஜி கல்லூரியிலும், சென்னை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஐஐடியிலும் செய்யப் போவதாக அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில், கடற்படை அதிகாரிகள், பல்கலைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சி கோவை, எட்டிமடையில் உள்ள அமிர்தா விஷ்வ வித்யா பீடம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. தென் மண்டல கடற்படையின் தலைமை கமாண்டர் அனில்குமார் சாவ்லாவும், பல்கலைக்கழக துணைவேந்தர் பி.வெங்கட்ரங்கன் ஆகியோரும் இதற்கான உடன்படிக்கையை பரிமாறிக் கொண்டனர்.

இது குறித்து கமாண்டர் அணில்குமார் சாவ்லா கூறும் போது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை எங்களால் பயன்படுத்த முடியும். தொழில்நுட்ப அடிப்படையில் இணைந்து செயல்பட இது ஒரு நல்ல வாய்ப்பு.
மேலும், கடற்படை வீரர்களை மேம்படுத்தும் வகையில் சிறந்த கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும்போது, உயர்தரமான கல்வி அறிவைப் பெற முடியும் இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பி.எஸ்.ஜி கல்லூரியிலும், சென்னை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஐஐடியிலும் செய்யப் போவதாக அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில், கடற்படை அதிகாரிகள், பல்கலைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.