ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அன்னூர் மன்னிஸ்வரர் கோவில் தேரோட்டம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு

கோவை : மேட்டுப்பாளையத்தை அடுத்த அன்னூர் மன்னிஸ்வரர் கோவிலில் இன்று நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கோவை : மேட்டுப்பாளையத்தை அடுத்த அன்னூர் மன்னிஸ்வரர் கோவிலில் இன்று நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

அன்னூரில் அமைந்துள்ள மன்னிஸ்வரர் சிவாலயம் 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இக்கோவிலில் சுயம்பு லிங்கமாக காட்சி அளிக்கும் சிவலிங்கத்தின் இருபுறமும் இறக்கைகள் இருப்பது கோவிலின் மற்றுமொரு சிறப்பு. கடந்த 2000 -ம் ஆண்டு முதல் இக்கோவிலில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 



இத்தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த வருடம் தேர் திருவிழா கடந்த 14 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினசரி மாலையில் சாமி திருவீதி உலா மற்றும் உற்சவங்கள் நடைபெற்று வந்தன. 

இந்நிலையில், இன்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட நிகழ்ச்சி காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த தேரோட்டத்தில், கோவை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து பங்கேற்று திருத்தேர் வடம் பிடித்தனர். 

மேலும், இந்த திருவிழாவில் பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகள் உள்ளிட்ட பல துறவிகள் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...