பிளாஸ்டிக் இல்லா நீலகிரியை உருவாக்க இருசக்கர வாகனப் பேரணி

நீலகிரி : பிளாஸ்டிக் இல்லா நீலகிரியை உருவாக்க சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் நட்சத்திர ஹோட்டல் சார்பில் இருசக்கர விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நீலகிரி : பிளாஸ்டிக் இல்லா நீலகிரியை உருவாக்க சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் நட்சத்திர ஹோட்டல் சார்பில் இருசக்கர விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 



நீலகிரி மாவட்டத்தில் இயற்கையையும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் கையுறைகள் உள்ளிட்ட பல்வேறு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனைப் பற்றிய விழிப்புணர்வுக்காக மாவட்ட எல்லைகள் மற்றும் சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பலகைகள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.



இதையடுத்து, பிளாஸ்டிக் இல்லா நீலகிரியை உருவாக்கும் நோக்கில் உதகையில் இயங்கி வரும் நட்சத்திர ஹோட்டல் சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அதன் தீமைகள் குறித்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், இப்பேரணியானது நகராட்சி பொறியாளர் ரவி கொடியசைக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தொடங்கியது. அங்கிருந்து புறப்பட்டு உதகை அரசு தாவரவியல் பூங்கா, கமர்சியல் சாலை, லோயர் பஜார் வழியாகப் படகு இல்லத்தில் நிறைவடைந்தது. இதில் சுமார் 50 -க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளுடன் பேரணியாகச் சென்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...