கோவையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் நள்ளிரவில் கல் வீச்சு

கோவை : குனியமுத்தூர் அருகேயுள்ள அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் நேற்று நள்ளிரவில் கல்வீசிய நபரை காவல்துறை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை : குனியமுத்தூர் அருகேயுள்ள அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் நேற்று நள்ளிரவில் கல்வீசிய நபரை காவல்துறை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை, பாலக்காடு சாலையில் உள்ள குனியமுத்தூர் அருகே மைல்கல் பகுதி உள்ளது. இந்த பகுதியில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அமைச்சர் வீட்டில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கல் வீசியுள்ளார். இதில் அமைச்சர் வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைந்துள்ளது.



அந்த சமயத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்க்கையில், கல் வீசிய நபர் தப்பிக்க முயற்சி செய்துள்ளார். இதையடுத்து, காவல்துறை அவரைத் துரத்தி பிடித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில், கல் வீசிய பாலக்காட்டை சேர்ந்த சிவதாஸ் (27), அமைச்சர் இல்லம் அருகில் உள்ள இரும்பு கடையில் உதவியாளராக வேலை செய்துவருகிறார் எனத் தெரியவந்துள்ளது. மேலும், குடிபோதையில் இருந்த சிவதாஸ் லேசாக மனநலமும் பாதிக்கப்பட்டவர் எனவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...