கோவை : கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் ஆலயத்தில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்ட சமத்துவ கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
கோவை : கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் ஆலயத்தில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்ட சமத்துவ கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ், சி.எஸ்.ஐ ஆயர் திமோதி ரவிந்தர், மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி பெரியய்யா, கெளமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், ஜமா அத்தே இஸ்லாமிக் ஹிந்தின் மக்கள் தொடர்பு செயலாளர் அப்துல் ஹக்கிம், குருத்துவாரா சிங் சபா இக்பால் சிங், மற்றும் கோவை மாவட்டத்தைச் சார்ந்த பல தன்னார்வ அமைப்புகளும், தொழில் முனைவோர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி குறித்து அப்துல் ஹக்கிம் கூறுகையில், " அனைத்துத் தரப்பினரும் கொண்டாடிய இந்த சமத்துவ கிறித்துவமஸ் மிகவும் வரவேற்கத்தக்கது. இதே போல் பொங்கல், தீபாவளி, ரம்ஜான் என அனைத்து நிகழ்ச்சிகளும் கொண்டாடப்பட வேண்டும்," என்றார்.

இந்நிகழ்ச்சியில், கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ், சி.எஸ்.ஐ ஆயர் திமோதி ரவிந்தர், மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி பெரியய்யா, கெளமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், ஜமா அத்தே இஸ்லாமிக் ஹிந்தின் மக்கள் தொடர்பு செயலாளர் அப்துல் ஹக்கிம், குருத்துவாரா சிங் சபா இக்பால் சிங், மற்றும் கோவை மாவட்டத்தைச் சார்ந்த பல தன்னார்வ அமைப்புகளும், தொழில் முனைவோர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி குறித்து அப்துல் ஹக்கிம் கூறுகையில், " அனைத்துத் தரப்பினரும் கொண்டாடிய இந்த சமத்துவ கிறித்துவமஸ் மிகவும் வரவேற்கத்தக்கது. இதே போல் பொங்கல், தீபாவளி, ரம்ஜான் என அனைத்து நிகழ்ச்சிகளும் கொண்டாடப்பட வேண்டும்," என்றார்.